திருவள்ளூர், செப்.30- அரசு ஊழியர்களுக்கு மருத்துவ மையம் ஒன்றை அமைக்க வேண்டும் என அரசு ஊழியர் சங்கம் வலியுறுத்தியுள்ளது. தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் திருவள்ளூர் மாவட்ட பேரவை மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் தலைவர் க.திவ்யா தலைமையில் நடைபெற்றது. தமிழ்நாடு ஓய்வூதியர் சங்கத்தின் மாவட்டத் தலைவர் கோ.இளங்கோவன் பேரவையை துவக்கி வைத்து பேசினார். மாவட்ட இணைச் செய லாளர் க.மேகநாதன் வரவேற்றார். செய லாளர் கௌ.மெல்கி ராஜாசிங் வேலை அறிக்கையையும், பொருளாளர் த.வெண்ணிலா வரவு,செலவு அறிக்கையை யும் சமர்ப்பித்தனர். தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை அலுவலர் சங்கத்தின் மாநில துணைத் தலைவர் சி.காந்திமதிநாதன், தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தின் மாநில துணைத் தலைவர் ஏ.மணிகண்டன் ஆகியோர் வாழ்த்தி பேசினர்.தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாநில செயலாளர் உ.சுமதி நிறைவுரையாற்றினார். கி.மோகன்தாஸ் நன்றி கூறினார். நிர்வாகிகள் சங்கத்தின் மாவட்டத் தலைவராக க.திவ்யா, செயலாளராக க.வெண்ணிலா, பொருளாளராக பா.மணிகண்டன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். தீர்மானங்கள் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும், முடக்கப்பட்ட அகவிலைப்படி, சரண் விடுப்பு வழங்க வேண்டும், சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஊழியர்களுக்கு வரையறுக்கப்பட்ட ஊதியம் வழங்க வேண்டும், காலி பணி யிடங்களை நிரப்ப வேண்டும். களப்பணியாளர்களின் பணிச்சுமையை குறைக்க வேண்டும், 21 மாத ஊதிய நிலுவை தொகையை வழங்க வேண்டும், மருத்துவ காப்பீடு திட்டத்தை அரசே ஏற்று நடத்த வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.