districts

img

ஊத்துக்கோட்டையில் வாசனை திரவிய தொழிற்சாலை

திருவள்ளூர்,ஏப்.5- கும்மிடிப்பூண்டி பகுதி தொழில் நகரமாக பெரியஅளவில் உரு வெடுத்து வருகிறது. அடுத்தடுத்து தொழில் பூங்காக்கள் வர உள்ளன. ஸ்ரீசிட்டி உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களுக்கு தினம் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வந்து செல்கின்றனர்.  வளர்ந்து வரும் நகரமாக உள்ள தால் மெட்ரோ ரயில் சேவையை கும்மிடிப்பூண்டி வரை நீடிக்க வேண்டும் என தொழிலாளர்கள், வியா பாரிகள் என அனைத்து தரப்பினரும் வலியுறுத்தி வருகின்றனர். அதே போல கும்மிடிப்பூண்டி ரயில் நிலை யத்தில் விரைவு ரயில்கள் நின்று செல்ல வேண்டும், புறநகர் ரயில் நிலையங்களில் பூட்டிக் கிடக்கும் கழிவறைகளை திறக்க வேண்டும்,  குறைந்தது அரைமணி நேரத்திற்கு ஒரு புறநகர் ரயிலை கும்மிடிப்பூண்டி மார்கத்தில் இயக்க வேண்டும். கலை மற்றும் அறிவியல் கல்லூரி அமைக்க வேண்டும் போன்ற பல்வேறு கோரிக்கைகள் வருங்காலத்தில் நிறைவேறும் என்ற நம்பிக்கையில் வாக்காளர்கள் காத்திருக்கின்றனர். ஊத்துக்கோட்டை முதல் ஜனப்பன் சத்திரம் வரை உள்ள நெடுஞ்சாலையை உடனடியாக செப்பனிட வேண்டும்.

அரசுகலைக்கல்லூரி அமைத்திடுக  

ஊத்துக்கோட்டை பணிமனையில்  இருந்து செங்குன்றம் வரை விழுப்புரம் கோட்ட பேருந்துகளை கூடுதலாக இயக்கிட வேண்டும். பெரிய பாளையம் புறவழி சாலையை விரைவாக துவங்கிட வேண்டும், பல்வேறு வகையான மலர் சாகுபடி நடைபெறுவதால், ஊத்துக்கோட்டை யில் வாசனை திரவிய தொழிற்சாலை அமைக்க வேண்டும். பெரிய பாளையத்தில் இருந்து இயங்கும் வகையில் 108 சேவை மற்றும் தீயணைப்பு நிலையமும் அமைக்க வேண்டும்.

பொன்னேரி தொகுதி மக்களின் எதிர்பார்ப்பு

 பொன்னேரி சட்டமன்ற தொகுதியில், இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்காத நிலை உள்ளது. மீஞ்சூர் பகுதியில் ஏராளமான ஆலைகளும் சரக்கு பெட்டகங்கள், கிடங்குகள் உள்ளன. ஒன்றிய-மாநிலஅரசு நிறுவனங்கள் மற்றும் தனியார் தொழிற்சாலைகள் இருந்தும்  வேலைவாய்ப்பு கிடைப்பது அரிதாக உள்ளது. தச்சூர் - காட்டுப்பள்ளி சாலை,  மகா பலிபுரம்- காட்டுப்பள்ளி சாலை உள்ளிட்ட இரு சாலைகளும் மின்கோபுரங்கள்  சூழ்ந்துள்ளது. இப்பகுதியில் விவசாயம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.  அதேபோல வடசென்னை அனல் மின்நிலையத்திலும் சாம்பல் கழிவுகளை விற்றதால் சுமார் ரூ 2000 கோடி வருவாய் தொகுப்பாக உள்ளது. இந்த சாம்பல் கழிவுகளால் அருகே உள்ள ஏரி முழுவதுமாக சாம்பல் நிரம்பியுள்ளது. இதனால் அதனைச்சுற்றியுள்ள பகுதிகளில் விவ சாயமும், மீன்பிடித்தொழிலும் முற்றி லும் பாதிக்கப்பட்டுள்ளது. ஆகவே செப்பாக்கம், ஊரணம்பேடு, புழுதி வாக்கம், மௌத்தம்பேடு பகுதி களில் அம்மக்களுக்கு அடிப்படை வசதிகளுடன் சுகாதாரமான வீடுகள் கட்டித்தர வேண்டும். காட்டுப்பள்ளி அதானி துறைமுகம் விரிவாக்கத்திற்காக ரூ.53 ஆயிரம் கோடி  மதிப்பீட்டில் அமைப்பதற்கு ஒன்றிய அரசு அனுமதி அளித்துள்ளது. இத்திட்டம் அமல் படுத்தப்பட்டால்  மீஞ்சூர் பகுதி மக்கள்  கடுமையான பாதிப்புக்குள்ளாவார்கள்.  போக்கு வரத்து நெரிசல் ஏற்பட்டு மக்களின்  வாழ்வாதாரம் சிதைக்கப்படும். அரசு மற்றும் சில தனியார் நிறு வனங்களால் கொசஸ்தலை ஆறு தூர்ந்து போகும் பரிதாப நிலைக்கு உள்ளாகிவருகிறது. இதனால் உபரிநீர் வடிவதில் தடைஏற்பட்டு வட சென்னை மற்றும் மீஞ்சூர் ஒன்றியம் முழுவதும் பாதிக்கப்படும். ஏற்கெனவே கடல் வளம் பாதிக்கப் பட்டுள்ளது. அது மேலும் சீரழிந்து மீன வர்களின் வாழ்வாதாரம் ஆபத்தான நிலையை அடையும் என்று  இயற்கை ஆர்வலர்கள் அச்சம் தெரி வித்துள்ளனர்.

வழக்குகளை ரத்து செய்க

காட்டுப்பள்ளி, அதானி , எல் அண்ட் டி துறைமுகங்களில் பணியாற்றும் 250 பழவேற்காடு பகுதியைச் சேர்ந்த தொழிலாளர்கள் அடையாள அட்டை கேட்ட ஒரே காரணத்திற்காக அவர்கள் மீது  7 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. 2013 முதல் நிலுவையில் உள்ள அந்த வழக்குகளை ரத்து செய்யப்படவேண்டும். கன்டெய்னர் ஆலைகள்,  டொரண்ட்கேஸ் ரிலையன்ஸ் டெர்மினல் தொழிற்சாலைகள் அமைந்துள்ளதும் ஏராளமான போக்குவரத்து நெரிசலை ஏற்படுத்தியுள்ளது. அதற்கு ஏற்ற முறையில் சாலைகள் விரிவாக்கம் செய்ய வேண்டும். மாசும், தூசும்  அளவு அதிகமாகி வருவதால் நிலத்தடிநீர் பாழ்பட்டுவருகிறது. சாலை விபத்துக்களின் மையமாக இப்பகுதிமாறிவருகிறது. இங்குள்ள எண்ணைய் நிறுவனங்களால் எந்த நேரத்திலும்  தீ விபத்துக்கள் ஏற்படும் என்ற நிலையில் மக்கள் பயத்தின் பிடியில் வாழ்ந்து வருகின்றனர்.

சுற்றுச்சூழலை பாதுகாத்திடுக

இங்குள்ள ஐஓசிஎல் நிறுவனத்தில் தற்போது உள்ள 50 லட்சம் டன் அளவில் உள்ள இயற்கை வாயு சேமிப்பு திட்டத்தை விரிவாக்கும் நோக்குடன் பிரதமர் மோடி  மேலும் 50 லட்சம் டன் இயற்கை எரிவாயு சேமிப்பு கிடங்கை கட்டுவதற்கு அனுமதி அளித்துள்ளார். இதனை ஒன்றிய அரசு திரும்பபெற வேண்டும். பசுமை தீர்ப்பாயம் வழக்கில் வடசென்னை பகுதி மாசு ஏற்படுவதற்கு காரணம் சிபிசிஎல், எம்எப்எல் , வடசென்னை அனல் மின்நிலையம்,  வல்லுார் அனல் மின்நிலையம் என்று குறிப்பிட்ட இந்த தொழிற்சாலைகள் மூலம் வெளியேற்றப்படும் மாசுவை கட்டுப்படுத்த வேண்டும். இதற்கான செலவுத்தொகையை நிறுவனங்களே வழங்க வேண்டும் என பசுமைத்தீர்ப்பாயம் தீர்ப்பு வழங்கியுள்ளது. மேற்கண்ட தொழிற்சாலைகள் பெரும்பாலும் திருவள்ளுர் மக்களவைத் தொகுதியில்  வருவதால் சுற்று சூழலை பாதுகாப்பதோடு, தொழிலாளர்கள், இளைஞர்கள், மீனவர்கள், விவசாயிகள் என சகல தரப்பினரின் எதிர்காலத்தையும்  பாதுகாக்க வேண்டியது மிகவும் அவசியமாகும்.  – பெ.ரூபன்

நிரந்தரமான அனல் மின்நிலையத்தில்  நிரந்தரமற்ற ஒப்பந்த ஊழியர்கள்

வல்லூர் அனல் மின்நிலையத்தில் பணிபுரியும் தொழிலாளர்கள் அனைவரும் ஒப்பந்த தொழிலாளர்களாக உள்ளனர். திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்த  இவர்களுக்கு அரசின் குறைந்தபட்ச ஊதியமே வழங்கப்படுகிறது. தேசிய அனல் மின்நிலையத்தில் உள்ள அதிகாரிகளுக்கு  ஊதியம், ஒன்றிய அரசின் தேசிய அனல் மின் கழகத்திலிருந்து வழங்கப்படுகிறது. மற்ற தொழிலாளர்களுக்கான ஊதியம் மாநில அரசு சார்பில் குறைந்தபட்ச ஊதியம் வழங்கப்படுகிறது. ஊதியம் வழங்குவதில் உள்ள வேற்றுமையை,  பாரபட்சத்தையும் களைய வேண்டும்,  கடந்த 10ஆண்டுகளாக நிரந்தரமில்லாமல் பணியாற்றும் 2000 தொழிலாளர்களை பணி நிரந்தரப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட காலமாக எழுப்பப்பட்டு வருகிறது. மக்கள் நலனுக்கு செலவிடுக வல்லுார் அனல் மின்நிலையத்தில் மின் உற்பத்திக்கு பயன்படுத்தும்  நிலக்கரியிலிருந்து எரிந்து விழும் சாம்பலை நிர்வாகம் விற்று  ரூ.1000 கோடிக்கு மேல் வருமானம் ஈட்டியுள்ளது. இந்த வருமானத்தொகையை அப்பகுதி மக்களின் நலனுக்கு செலவிடவேண்டும் என்று ஒன்றிய அரசு உத்தரவு இருந்தாலும். அனல்மின் நிர்வாகம் அந்த வருமானத்தை லாபக்கணக்கில் கொண்டுவராமல் உள்ளது. இதனால்  அந்தப்பகுதியில் வாழும் மக்களுக்கான நலத்திட்டங்களை நிர்வாகம் அமல்படுத்தாமல் ஏமாற்றிவருகிறது. ஆகவே அந்த தொகையில் மீஞ்சூரில் சிறப்பு பன்னோக்கு மருத்துவமனை கட்டுவதற்கும் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யவும் குருவிமேடு, அத்திப்பட்டு புதுநகர்  பகுதி மக்களுக்கு வீடுகளை கட்டித் தர வேண்டும்.