விழுப்புரம், மார்ச் 30- விழுப்புரம் மக்களவைத் தொகுதி யில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் வியாழக்கிழமை வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். இந்தியா கூட்டணியின் சார்பில் விழுப்புரம் மக்களவைத் தொகுதியின் விடுதலை சிறுத்தை கட்சியின் வேட்பாளராக துரை.ரவிக்குமார் போட்டியிடுகிறார். அவருக்கு கட்சியின் மாநில தலைவர் தொல்.திருமாவள வன் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார், அவர் உளுந்தூர்பேட்டையில் வாக்கு சேகரிப்பு தொடங்கி, திருக்கோவிலூர், விழுப்புரம், விக்கிரவாண்டி வானூர், திண்டிவனம், மரக்காணம் ஆகிய பகுதிகளில் ஆதரவு திரட்டினார். அவருடன் திமுக மாநில துணைப் பொதுச் செயலாளரும், தமிழ்நாடு உயர்கல்வி அமைச்சருமான க.பொன் முடி இணைந்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது இந்தியா கூட்டணி கட்சிகளைச் சார்ந்த திமுக மாவட்ட செயலாளர் புகழேந்தி எம்எல்ஏ, விழுப்புரம் சட்டமன்றத் தொகுதி லட்சு மணன் எம் எல் ஏ, நகர செயலாளர் சர்க்கரை, நகர்மன்ற தலைவர் தமிழ்ச் செல்வி, சிபிஎம் கட்சியின் முன்னாள் எம்எல்ஏ ஆர்.ராமமூர்த்தி, மாவட்ட செயலாளர் என்.சுப்பிரமணியன், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் பி.குமார், வி.ராதாகிருஷ்ணன், எஸ்.முத்துக்குமரன், ஜி.ராஜேந்திரன்,ஏ.சங்கரன், எஸ்.கீதா, ஆர்.மூர்த்தி,எஸ் .வேலுமாறன், சே.அறிவழகன், ஆர்.டி.முருகன் உட்பட கட்சி நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். மேலும் சிபிஐ மாவட்ட செயலாளர் ஆ.சவுரிராஜன், விடுதலை சிறுத்தை கட்சியின் மாவட்ட செயலாளர் பெரியார் உட்பட காங்கிரஸ்,மதிமுக, தமிழக வாழ்வுரிமை கட்சி, மனித நேய மக்கள் கட்சி, முஸ்லிம் லீக் உட்பட இந்தியா கூட்டணி கட்சியினர் திரளாக கலந்து கொண்டனர்.