சிதம்பரம், மார்ச் 20- திமுக கூட்டணியில் சிதம்பரம் (தனி) தொகுதி விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு ஒதுக்கப்பட் டுள்ளது. இத்தொகுதியில், தற்போது மக்களவை உறுப்பினராக உள்ள தொல்.திருமாவளவன் மீண்டும் போட்டியிடுகிறார். இவர், அக்கட்சியின் தலை வராக உள்ளார். அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள அங்கனூர் கிராமத்தைச் சேர்ந்த திருமாவளவன் (61), சென்னை மாநிலக் கல்லூரி யில் இளங்கலை வேதியி யல், சென்னை பல்கலைக் கழகத்தில் முதுகலை குற்றவியல் பயின்றவர். சென்னை சட்டக் கல்லூரி யில் சட்டப் படிப்பை முடித்தார். திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழகத்தில் முனைவர் பட்டமும் பெற்றுள்ளார். திருமணம் செய்து கொள்ள வில்லை. விடுதலைச் சிறுத் தைகள் கட்சியின் தலை வரான இவர், ஒடுக்கப்பட்ட மக்களின் முன்னேற்றத்திற் காக சட்டம், சமூகம், அரசி யல் என பல தளங்களில் தன்னை ஈடுபடுத்தி தமிழ் நாடு மக்களின் முக்கியத் தலைவர்களில் ஒருவராக இயங்கி வருகிறார். முற்போக்கு சிந்த னையை விதைத்தல், ஆதி திராவிட மக்கள் மற்றும் ஒட்டுமொத்த தமிழ் மக்க ளின் உரிமைகளுக்காகப் போராட்டம் நடத்துதல், தனித்தமிழ் வளர்ச்சிக்கு உதவுதல், சாதிய அடக்கு முறைக்கு இந்துத்வா கொள்கைகளுக்கு எதிராக கருத்தியல் ரீதியாக போராடி வருகிறார். இவர் சிதம்பரம் மக்க ளவை (தனி) தொகுதியில் 5 முறை போட்டியிட்டு, இரு முறை வெற்றி பெற்றுள் ளார். தற்போது நடை பெறவுள்ள மக்களவைத் தேர்தலில் இந்தத் தொகுதி யில் 6 ஆவது முறையாக திமுக கூட்டணியில் தனிச் சின்னமான பானை சின்னத்தில் அவர் களம் காண்கிறார்.