districts

img

தமிழ்நாட்டில் டேரா போட்டு பிரச்சாரம் செய்தாலும் மோடியின் தோல்வி உறுதி திருமாவளவன் குற்றச்சாட்டு

சிதம்பரம், ஏப். 16-  சிதம்பரம் மக்களவைத்தொகுதியில்  போட்டியிடும் விசிக தலைவர் தொல். திருமாவளவன் செவ்வாயன்று சிதம்பரம் சட்டமன்ற தொகுதியில் பிரச்சாரம் மேற்கொண்டார். சிதம்பரம் பு.முட்லூர் பகுதியில் நடைபெற்ற பிரச்சாரத்தில் அவர் பேசுகையில், மழை வெள்ளத்தில் தமிழ்நாட்டிற்கு வராத மோடி தேர்தல் வந்தவுடன் பத்து முறை வந்துவிட்டார். காங்கிரஸுக்கு பதிலாக திமுக தான் தனது எதிர்க்கட்சி என்பது போல தமிழ்நாட்டிலேயே டேரா போட்டு தங்கி பிரச்சாரம் செய்து வருகிறார்மோடி. கேஸ் விலை, அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வு,  சாதிய மோதல்களை உருவாக்கி மக்களை பிளவுப்படுத்த நினைக்கும் மோடி மீண்டும் ஆட்சிக்கு வந்தால் 100-நாள் வேலைத்திட்டம் இருக்காது. ரேசன் திட்டம் பறிபோகும் என்றார்.  இந்த பிரச்சாரத்தில் திமுக கடலூர் கிழக்கு மாவட்ட கழக பொருளாளர் கதிரவன், ஒன்றிய செயலாளர் முத்து பெருமாள், சிபிஎம் சிதம்பரம் நகர செயலாளர் ராஜா, பரங்கிப்பேட்டை ஒன்றிய செயலாளர் விஜய் உள்ளிட்ட கூட்டணி கட்சியினர் உடன் இருந்தனர்.