districts

img

தோழர் எஸ்.துரைராஜ் மூன்றாம் ஆண்டு நினைவு தினம்

கடலூர்,செப்.2- தோழர் எஸ்.துரைராஜ் மூன்றாம் ஆண்டு நினைவு தினம் சனிக்கிழமை (செப்.2)  அனுசரிக்கப்பட்டது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினரும், கடலூர் மாவட்டத்தில் விவசாயிகள், விவசாய தொழி லாளர்களை ஒன்று திரட்டுவதில் முன்னணி யில் திகழ்ந்தவரும், சங்கங்களின் மாநில தலைவராக விளங்கியவருமான தோழர் எஸ்.துரைராஜ் 3ம் ஆண்டு நினைவு அனுசரிக்கப்பட்டது.  பெரிய காட்டுபாளையத்தில் அவருடைய உருவப்படம் வைக்கப்பட்டு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர் பின்னர் கொடியேற்று நிகழ்ச்சி மற்றும் அரசி யல் விளக்க கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு  பண்ருட்டி வட்டக் குழு உறுப்பினர் வி.பூர்வசந்திரன்  தலைமை தாங்கினார். கூட்டத்தில் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் டி.ஆறுமுகம்,  எஸ்.திருஅரசு, வட்ட செயலாளர்கள் எஸ்.கே. ஏழுமலை, மாவட்டக் குழு உறுப்பி னர் டி.கிருஷ்ணன், ஆர்.பாலமுருகன், டி.ஜெயராமன், வட்டக் குழு உறுப்பினர்கள் லோகநாதன், பன்னீர், தமிழ்செல்வன் அறிவில் இயக்க மாவட்ட செயலாளர் ஆர்.தாமோதரன்  உள்ளிட்டோர் பங்கேற்றனர்.