குறைந்த ஓய்வூதியம் பெறும் ஓய்வு பெற்ற சத்துணவு, அங்கன்வாடி, ஊராட்சி செயலாளர், வனக்காவலர் உள்ளிட்ட அனைவருக்கும் குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ.7850 வழங்கக் கோரி தமிழ்நாடு அரசு அனைத்து துறை ஓய்வூதியர் சங்கத்தினர் கடலூர் பழைய கலெக்டர் அலுவலகம் அருகில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தலைவர் தனுசு தலைமை தாங்கினார். கூட்டமைப்பு தலைவர் புருஷோத்தமன், மாநிலச் செயலாளர் மனோகரன் ஆகியோர் பேசினர்.