districts

நீர்நிலை ஆக்கிரமிப்புகள் அகற்றுவதில் பாரபட்சம் கூடாது : உயர்நீதிமன்றம்

சென்னை, பிப். 8 - நீர்நிலைகளை அகற்று வதில் பாரபட்சம் காட்டக் கூடாது என்று சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளது. தமிழகத்தில் அரசு நிலங்கள், நீர்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணிகளில் அரசு  ஈடுபட்டு வருகிறது. இந்நிலை யில் ஆக்கிரமிப்பு என்று இந்து கோவில்களை மட்டும் இடிப்பதாக இந்து அமைப்பு கள் பொய்ப்பிரச்சாரம் செய்து வருகின்றன. இதன்  தொடர்ச்சியாக இந்து முன்னணி அமைப்பின் மாநில செய்தித் தொடர் பாளர் இளங்கோ சென்னை உயர் நீதிமன்றத்தில் இது தொடர்பாக மனுத்தாக்கல் செய்தார். அதில், தமிழகத்தில் நீர்நிலைகளில் 4 லட்சத்து 40 ஆயிரத்து 927 ஆக்கிரமிப் புகள் இருப்பதாக தமிழக அரசு தாக்கல் செய்த அறிக்கையில் உள்ளது. நீர்நிலை நிலங்களை ஆக்கி ரமித்து, 10 ஆயிரத்து 556 ஏக்கரில்  குடியிருப்புகளும், 1,500 ஏக்கரில் வணிக நிறு வனங்களும், 30 ஆயிரத்து 24 ஏக்கர் நிலம் விவசாயத் துக்கும் பயன்படுத்தப்படு கிறது. குறிப்பாக, 1,311 ஏக்கர் நிலங்களை ஆக்கிரமித்து அரசு கட்டிடங்கள் கட்ட ப்பட்டுள்ளது. ஆனால், ஆக்கிரமிப்பு என்ற பெயரில் இந்து கோவி ல்களை மட்டும் அரசு இடித்து  வருகிறது. அண்மையில் 200க்கும் மேற்பட்ட கோவில்கள் இடிக்கப்பட் டுள்ளது. அதில் ஆயி ரமாண்டுகள், நூறாண்டுகள் பழமையான கோவில்களும் உள்ளன. எனவே, இந்து கோவில்களை மட்டும் இடிக்க தடை விதிக்க வேண்டும். அரசு நிலங்களில் உள்ள கோவில்கள், பிற மத  வழிபாட்டுத் தலங்களை முறைப்படுத்த அல்லது மாற்று இடங்களில் அமைக்க அரசுக்கு உத்தர விட வேண்டும் என கோரி யுள்ளார். இந்த மனு, பொறுப்பு தலைமை நீதிபதி முனீஷ் வர்நாத் பண்டாரி மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி அடங்கிய அமர்வு முன் செவ்வாயன்று (பிப்.8) விசாரணைக்கு வந்தது. மனு தாரர் தரப்பில் ஆஜரான  வழக்கறிஞர், ஆக்கிரமிப்பு நிலங்களில் உள்ள கோவில் களை முறைப்படுத்தவும், மாற்று இடம் ஒதுக்கவும் திட்டம் வகுக்கும்படி அனைத்து மாநில அரசு களுக்கும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதன்படி, திட்டத்தை வகுக்காமல் கோவில்களை இடிக்க தடை விதிக்க வேண் டும். இந்து கோவில்களுக்கு எதிராக மட்டும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், பிற வழிபாட்டுத் தலங்க ளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படவில்லை என் றார். இந்த வாதத்தை ஏற்க  மறுத்த நீதிபதிகள், உச்சநீதி மன்ற உத்தரவில் நீர்நிலை கள் பற்றி குறிப்பிடவில்லை. இந்து கோவில்கள் மீது மட்டும் நடவடிக்கை எடுக் கப்படுவதாக எந்த ஆதார மும் இல்லை. இந்து கோவில் களுக்கு எதிராக மட்டும் பாரபட்சமாக நடவடிக்கை எடுக்கப்படுவது குறித்து உரிய ஆதாரங்களுடன் விரிவான மனுத்தாக்கல் செய்ய மனுதாரர் தரப்புக்கு உத்தரவிட்டனர். நீர்நிலைகளை ஆக்கிர மிப்புகளை அகற்ற வேண்டும். இதில் எந்த பாரபட்சமும் காட்ட கூடாது. குறிப்பிட்ட மத வழிபாட்டு தலங்கள் மீது பாரபட்சம் காட்டியிருப்பது தெரிய வந்தால் அரசுக்குதான் சிக்கல் ஏற்படும். கோவில் நிலங்கள் ஆக்கிரமிப்பு களுக்கு எதிராக 2003 முதல் 2022 வரை எந்த  நடவடிக்கையும் எடுக்க வில்லை. இதற்கு சம்பந்தப் பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்காமல் ஆணையர் கடமை தவறு கிறார் என்று நீதிபதிகள் அதிருப்தி தெரிவித்து விசார ணையை அடுத்த வாரத் துக்கு ஒத்தி வைத்தனர்.