சென்னை, பிப். 5- சென்னையில் குடிநீர் தட்டுப்பாடு என்ற பேச்சுக்கே இடமில்லாத வகையில், அனைத்துப் பகுதிகளுக்கும் குடிநீர் வழங்கப்பட்டு வருவதாக தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி கூறியுள்ளார். சென்னை மாநகராட்சி சார்பில் ரூ.11.98 கோடி மதிப்பில் நிறைவுபெற்றுள்ள 13 திட்டப் பணிகளை மக்கள் பயன்பாட்டுக் காக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திங்க ளன்று (பிப். 5) திறந்து வைத்தார். மேலும், சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் மற்றும் கழிவு நீரகற்று வாரியத்தின் சார்பில் ரூ.152.67 கோடி மதிப்பில் மேற்கொள்ளப்பட உள்ள 52 புதிய திட்டப்பணிகளுக்கு அடிக் கல் நாட்டினார். பின்னர் அமைச்சர் உதயநிதி பேசுகை யில், வேகமாக நகரமயமாகும் மாநிலங் களின் பட்டியலில் இந்தியாவில் தமிழ்நாடு முதலிடம் வகிக்கிறது. குறிப்பாக, சென்னை இன்றைக்கு விரிவடைந்து கொண்டே போகி றது. அதேபோல், சென்னையின் மக்கள் தொகையும் பெருகிக் கொண்டே இருக்கி றது. இந்த வளர்ச்சிக்கேற்ப சென்னை மாநகராட்சி சிறப்பாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. சென்னையில் குடிநீர் தட்டுப்பாடு என்ற பேச்சுக்கே இடமில்லாத வகையில், அனைத்துப் பகுதிகளுக்கும் சிறப்பாக குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. மேம்பாலப் பணி கள் முழு வேகம் எடுத்துள்ளன. பல்வேறு மேம்பாலப் பணிகள் முடிக்கப்பெற்று மக்கள் பயன்பாட்டுக்காக திறந்து வைக்கப் பட்டுள்ளன. சென்னையில் அண்மையில் ஏற்பட்ட தைப் போல கடந்த 2015ஆம் ஆண்டு ஒரு மிகப்பெரிய வெள்ளம் வந்தது. அந்த சமயத்தில், சுமார் பதினைந்து நாட்கள் சென்னை முடங்கிப் போனது. ஆனால், இந்தமுறை பெய்த மழையில் இரண்டே நாட்களில் நாம் மீண்டு வருவதற்கு சென்னை மாநகராட்சி, எம்எல்ஏக்கள், உள்ளாட்சிப் பிரதிநிதிகள், அரசு அதிகாரிகள், மாநகராட்சிப் பணி யாளர்களின் பங்குதான் மிக முக்கிய காரண மாக இருந்தது என்று உதயநிதி பேசினார்.