சிதம்பரம்,ஏப்.3- சிதம்பரம் அரசு மருத்துவமனையில் நாய் கடிக்கு உரிய மருந்து இல்லாததை கண்டித்து இந்திய கம்யூனிட் கட்சியினர் சார்பில் ஞாயிறன்று (ஏப்3) மருத்துமனை முன்பு சாலை மறியல் போராட்டம் நடத்தினர். மாநில நிர்வாகக் குழு உறுப்பினர் மணிவாசகம் தலைமையில் நடைபெற்ற இந்த மறியல் போராட்டத்தில் சிதம்பரம் நகர செயலாளர் தமிமுன் அன்சாரி, மாவட்ட நிர்வாக குழு உறுப்பினர் சேகர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். பின்னர் சிதம்பரம் அரசு மருத்துவமனை தலைமை மருத்துவ அலுவலர் ரவி போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் விரைவில் நாய் கடிக்கு மருந்து கிடைக்க ஏற்பாடு செய்வதாக உறுதியளித்தார்.