விழுப்புரம் மாவட்டம், கண்டாச்சிபுரம் வட்டம், அரகண்டநல்லூர் அருகே அந்திலி வருவாய் கிராம எல்லையில் சர்வே எண். 12/5ல் ஆங்கிலேயர் ஆட்சி காலம் முதல் நரிக்குறவர் இன மக்கள் பல தலைமுறைகளாக வாழ்ந்து வரு கின்றனர்.
அந்த இடத்திற்கு, எம்ஜிஆர் ஆட்சியின்போது 28 குடும்பங்களுக்கு குடிமனை பட்டா வழங்கப்பட்டது. பிறகு, அந்த மக்களுக்கு இலவச வீடுகள் கட்டி கொடுக்கப் பட்டது. சிமெண்ட் சாலையை அமைத்துக் கொடுத்தனர். குடிநீர், தெருவிளக்கு வசதிகள் செய்து தரப்பட்டது. வீட்டு வரியும் கட்டி வருகின்றனர்.
இந்நிலையில், அரகண்ட நல்லூர் சேர்ந்த பன்னீர்செல்வம் என்பவர் 27.07.2017 அன்று அடை யாளம் தெரிந்த அடியாட்களுடன் இரவு 12 மணிக்கு ஜேசிபி இயந்திரங்கள் கொண்டுவந்தார். நரிக்குறவர் இன மக்கள் வசித்து வரும் நிலத்தை விலைக்கு வாங்கி விட்டதாகவும், குடிசைகளை காலி செய்ய போகிறோம் என்று மிரட்டியுள்ளார்.
இது குறித்து அரகண்டநல்லூர் காவல் நிலையத்தில் முறையீடு செய்துள்ளனர். இதையடுத்து, பன்னீர் செல்வத்தின் அடியாட்கள் பின் வாங்கியுள்ளனர். பிறகு, மாவட்ட ஆட்சியரிடம் புகார் செய்த னர். பின்னர், அந்த குடியிருப்பு பகுதிக்கு சென்ற அதிகாரிகள் விசாரணை நடத்தியுள்ளனர்.
இந்நிலையில், 24.9.2019 அன்று மீண்டும் மிரட்டியுள்ளனர். இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் துறை அதிகாரி களுக்கு புகார் கொடுத்துள்ளனர். அந்த பகுதிக்கு வந்த திருக் கோவிலூர் கோட்டாட்சியர் விசா ரணை செய்து, குடியிருப்புகளை கிராம கணக்கில் பதிவு செய்ய நில அளவை செய்துள்ளனர்.
அதன்பிறகு எந்த நடவடிக்கை யும் எடுக்கவில்லை. 21.12.2020 அன்று மூன்றாவது முறையாக அடையாளம் தெரிந்த 20க்கும் மேற்பட்ட நபர்கள் நரிக்குறவர் இன மக்களை மிரட்டியுள்ளனர். இதையடுத்து கண்டாச்சிபுரம் வட்டாட்சியர் மற்றும் வருவாய் துறையினர் நேரடி கள ஆய்வு செய்ய வேண்டும். கிராம கணக்கில் உரிய திருத்தம் செய்து கொடுக்க வேண்டும் என்றும் நான்காவது முறையாக நரிக்குறவர் இன மக்கள் புகார் மனு கொடுத்தனர்.
மேலும், சென்னை மனித உரிமை ஆணைய பதிவாளர் சிவில் நீதிபதியின் உத்தரவுகளின் படி வருவாய் துறை அதிகாரி கள் கள விசாரணை செய்து ஆவணங்களை சரிபார்த்துள்ள னர். அதன்பிறகு, சங்கர் த/பெ. கிராமணி என்கிற நரிக்குறவர் இனத்தவருக்கு அரசு புன்செய் தரிசு நிலத்தில் வழங்கிய பட்டா வேறு சில நபர்கள் பெயரில் பட்டா மாற்றம் செய்திருப்பது கண்டு பிடித்தனர். பிறகு, அந்த பட்டாவை ரத்து செய்ய வேண்டும் கண்டாச்சிபுரம் வட்டாட்சியர், விழுப்புரம் வருவாய் கோட்டாட்சி யர் ஆகியோருக்கு 20.2.2023 அன்று கடிதம் அனுப்பி வைத்துள் ளனர்.
இந்த நிலையில் சிஐடியு மாவட்டப் பொருளாளர் வி.பால கிருஷ்ணன், மாவட்ட துணைச் செயலாளர் எம்.முருகன், ஏ ஆர்கே.தமிழ்ச்செல்வன் உள்ளிட்டோருடன் பாதிக்கப்பட்ட நரிக்குறவர் இன மக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் சென்று கோரிக்கை மனு ஒன்றை கொடுத்தார். அதில், “மோசடி பட்டா பத்திரங்களை ரத்து செய்ய வேண்டும். நரிக்குறவர் இன மக்கள் பெயரில் உள்ள பட்டாக்களை வருவாய் கிராம கணக்கில் பதிவேற்றம் செய்து அந்த மக்களின் வாழ்வில் ஒளி யேற்ற வேண்டும் என்று வலி யுறுத்தினர்.