districts

img

சென்னை நகர பேருந்துகளில் பெண்களிடம் நூதன முறையில் திருட்டு

போரூர், மே 4- சென்னை எம்.ஜி.ஆர் நகர், குண்டல கேசி தெருவை சேர்ந்தவர் பாலமுருகன். மாநகர போக்குவரத்து கழகத்தில் நடத்துந ராக  பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி  ராஜலட்சுமி. இவர் கடந்த மாதம் 23ந் தேதி வெளியூரில் நடந்த உறவினர் வீட்டு திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். பின்னர் தான் அணிந்திருந்த 18பவுன் நகைகளை கழட்டி கைப்பையில் போட்டுக் கொண்டு கோயம்பேட்டில் இருந்து மாநகர பேருந்து (தடம் எண்70வி) மூலம் வீடு  திரும்பினார். ஜாபர்கான்பேட்டை காசி தியேட்டர் பேருந்து நிறுத்தத்தில் இறங்கிய ராஜலட்சுமி நகைகளுடன் தனது கைப்பை மாயமானது கண்டு அதிர்ச்சி அடைந்தார். கூட்ட நெரிசலை பயன்படுத்தி மர்ம நபர்கள் நகை பையை சுருட்டிச் சென்றது தெரியவந்தது.  இதுகுறித்து  அவர் எம்.ஜி.ஆர் நகர்  காவல்நிலையத்தில் புகார் அளித்தார். காவல்துறையினர் தனிப்படை அமைத்து கோயம்பேடு முதல் வண்டலூர் வரை உள்ள மாநகர பேருந்து நிறுத்தங்களில் பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர். அப்போது நகை கொள்ளையில் ஈடு பட்டது ஆந்திரா மாநிலத்தை சேர்ந்த விமலா (30) என்பது தெரிந்தது. வேலூரில்  பதுங்கி இருந்த அவரை தனிப்படை காவல்துறையினர் கைது செய்தனர். விமலா கூட்ட நெரிசல் மிகுந்த பேருந்து களில் ஏறி கொள்ளை அடிப்பவர் என தெரிய வந்தது. இவரை போன்று மேலும் பல பெண்கள் பேருந்துகளில் கைவரிசை காட்டுவதற்காக சென்னை மாநகருக்குள் ஊடுருவி இருப்பதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். கூட்ட நெரிசலில் சில்லரையை சிதறி விட்டு கவனத்தை திசை திருப்பி இந்த பெண்கள் கொள்ளை அடிப்பதாக தெரிய  வந்துள்ளது. எம்.ஜி.ஆர். நகர் காவல்துறை யால் கைது செய்யப்பட்டுள்ள விமலா விடமும் சில்லரையை சிதற விட்டுத்தான் நகையை அபேஸ் செய்துள்ளார். ஆந்திராவில் இருந்து ஒன்றாக புறப்பட்டு சென்னைக்கு வரும் இவர்கள்  பின்னர் தனித்தனியாக பிரிந்து சென்று  கைவரிசை காட்டு வார்கள். காலையில்  இருந்து இரவு வரையில் கிடைப்பதை சுருட்டிக் கொண்டு ஆந்திராவுக்கு சென்று  விடுவார்கள். விமலாவை போன்று சென்னை மாநகர பேருந்துகளில்  கைவரிசை காட்டிவரும் மற்ற பெண்களையும் கைது  செய்ய காவல்துறையினர் திட்டமிட்டுள்ள னர்.