மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருவண்ணாமலை மாவட்டக் குழு சார்பில் தீக்கதிர் 25 ஆண்டு சந்தா, 11 ஆறு மாத சந்தா, 88 மாத சந்தா மாநிலக்குழு உறுப்பினர் ஆர்.பத்ரியிடம் செவ்வாயன்று (டிச. 27) வழங்கப்பட்டது. இதில் மாவட்டச் செயலாளர் எம்.சிவக்குமார், செயற்குழு உறுப்பினர்கள் எம்.வீரபத்திரன், எம்.பிரகலநாதன், ப.செல்வன், எஸ்.ராமதாஸ், எ.லட்சுமணன், வாசுகி, வட்டாரச் செயலாளர்கள் டி.வெங்கடேசன், அப்துல்காதர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
வேலூர் மாவட்டம், குடியாத்தம் நகரின் மையப்பகுதியிலுள்ள தரைப்பாலத்தை மேம்பாலமாக தரம் உயர்த்த வேண்டும்,ஷ புவனேஸ்வரிபேட்டை கற்பகம் நியாய விலைக் கடையை இரண்டாக பிரிக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் கோபாலபுரத்தில் நகரக் குழு உறுப்பினர் என்.லெனின் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாநிலக் குழு உறுப்பினர் எஸ்.டி.சங்கரி, நகரச் செயலாளர் பி.காத்தவராயன், மாவட்டக் குழு உறுப்பினர் வே.குபேந்திரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.