தூத்துக்குடி, பிப். 14 - தூத்துக்குடியில் அமைந்துள்ள நெய்வேலி தமிழ்நாடு பவர் லிமிடெட் நிறுவனத்தின் (என்டிபிஎல்) ஒப்பந்தத் தொழிலாளர்கள் தங்களது கோரிக்கை களை வலியுறுத்தி தொடர் போராட்டத்தை துவக்கி இரண்டாவது நாளாக நடத்தி வருகின்றனர். தமிழ்நாடு மின்ஊழியர் மத்திய அமைப்பு (சிஐடியு) அனல்மின் நிலையக் கிளை சார்பில் நடைபெற்று வரும் இப்போராட்டத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஒப்பந்தத் தொழிலாளர்கள் பங்கேற்றுள்ளனர். சமவேலைக்கு சம ஊதியம் உள்ளிட்ட கோரிக்கைகள் தொடர்பான துணை தலைமை நடுவண்ஆணையரின் தீர்ப்பை அமலாக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கை களை வலியுறுத்தி தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தொழிற்சங்கத்துடன் என்டிபிஎல் அனல்மின் நிலைய நிர்வா கம் பேச்சுவார்த்தை நடத்த மறுக்கிறது. இதனால் இரண்டாவது நாளாக செவ்வாயன்றும் போராட்டம் நீடித்தது. இப்போராட்டத்திற்கு சிஐடியு என்டிபிஎல் அனல்மின் நிலைய கிளைச் செயலாளர் அப்பாத்துரை தலைமையேற்றார். சிஐடியு மாவட்டத் தலைவர் பேச்சி முத்து முன்னிலை வகிக்க, மாநிலச் செயலாளர் ஆர்.ரசல் கண்டன உரை நிகழ்த்தினார்.சிபிஎம் மாவட்ட செயலாளர் கே.பி.ஆறுமுகம், மாநகர் செயலாளர் தா.ராஜா, உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.