புதுச்சேரி, நவ. 17- விவசாய தினக்கூலி ஊழியர்களுக்கு பணி நிரந்தர ஆணையை முதல்வர் ரங்கசாமி வழங்கி னார். காரைக்காலில் இயங்கி வரும் பண்டித ஜவஹர்லால் நேரு வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி மையம் கடந்த 1987 முதல் இயங்கி வருகிறது. இந்த கல்லூரியில் கடந்த 25 ஆண்டுகளுக்கு மேல் பணிபுரிந்த 32 விவசாய தினக்கூலி ஊழியர்களை பணி நிரந்தரம் செய்ய வலி யுறுத்தி அரசு ஊழியர் சங்கங்களின் சம்மே ளனம் சார்பில் பல கட்ட போராட்டங்கள் நடை பெற்று வந்தது. அரசு ஊழியர் சம்மேளனத்தின் கோரிக் கையை ஏற்று புதுச்சேரி அரசு ,வேளாண்மை துறை சார்பில் 32 ஊழியர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கும் நிகழ்ச்சி சட்டப் பேரவை முதல்வர் அலுவல கத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் முதல்வர் ரங்கசாமி கலந்து கொண்டு விவசாயக் கூலி தொழிலாளர்களுக்கு பணி நிரந்தர ஆணையை வழங்கினார். நிகழ்ச்சியில் சட்டப்பேரவை தலைவர் ஆர்.செல்வம், வேளாண் துறை அமைச்சர் தேனி.ஜெயக்குமார்,வேளாண் கல்லூரி முதல்வர் புஷ்பராஜ் மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.