கிருஷ்ணகிரி, மே 25-
தேன்கனிக்கோட்டை வட்டம், தளி பகுதி பசவனதொட்டி கிராமத்தை சேர்ந்தவர் கூலி தொழிலாளி சுரேஷ். மண் சுவரால் கட்டப்பட்ட பழமையான ஓட்டு வீட்டில் வசிக்கின்றார். கடந்த 4 நாட்களாக சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதனால் வீட்டின் முன்பகுதி சுவர் இடிந்து விழுந்ததில், வீட்டுக்கு வெளியில் விளையாடிக் கொண்டிருந்து அவரது மூன்று வயது குழந்தை ரக்சித் மீது விழுந்தது.
இதில் பலத்த காயமடைந்த குழந்தையை மீட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக ஓசூர் கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் குழந்தை ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து தளி காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்