districts

img

காத்திருப்பு போராட்டம் வெற்றி: குடிநீர் குழாய் சீரமைப்பு

சென்னை, ஜூன் 1- திருவொற்றியூர் 4ஆவது வார்டு முல்லை நகர் சந்திப்பில்,  மழைநீர் வடிகால் பணிகள் முறையாக மேற்கொள்ள வில்லை. இதுகுறித்து அதிகாரிகளிடம் பலமுறை புகார் தெரிவித்தும் எந்த நடவடிக்கை எடுக்கவில்லை. மேலும், மழைநீர் வடிகால் பணிக்காக பள்ளம் தோண்டப் பட்டபோது, குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு கடந்த 20 நாட்களாக குடிநீருடன் கழிவு நீர் கலந்து வந்தது. உடனடியாக குடிநீர் குழாய் உடைப்பை சரி செய்யக் கோரி 4ஆவது வார்டு கவுன்சிலர் ஆர்.ஜெயராமன் தலைமையில் முல்லை நகரைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்டோர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மெட்ரோ உதவி பொறியாளர் மதன்குமார் தலைமையில்  ஊழியர்கள் உடைக்கப்பட்ட குடிநீர் குழாய் இணைப்பை சீரமைத்தனர். பின்னர் அனைவரும் கலைந்து சென்றனர். இதில் முல்லை நகர் நலச் சங்க நிர்வாகிகள் சக்திவேல்,  பொன்னம்பலம், காமராஜ் நகர் தலைவர் நிரஞ்சன் பட்நாயக், கன்னியலால் லேஅவுட் தலைவர் சடகோபன், வி.பி. நகர் சங்க ஆலோசகர் கருணாநிதி,  பொருளாளர் விஜய்குமார், அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் எஸ்.பாக்கியம், சிபிஎம் பகுதிக்குழு உறுப்பினர்கள் வெங்கட்டையா, அலமேலு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

;