districts

img

பேருந்தை சிறைபிடித்த கிராம மக்கள்

வேலூர், அக்.4- வேலூர் மாவட்டம், கணியம்பாடியை அடுத்த அமிர்தி செல்லும் சாலையில் உள்ளது நஞ்சுகொண்டாபுரம். இந்த கிராமத்திலிருந்து நாகநதி கூட்டுச்சாலை வரும் செல்லும் சுமார் 6 கிலோ மீட்டர் சாலை கடந்த 3 ஆண்டுகளாக பழுதடைந்து குண்டும் குழியுமாக உள்ளது. இந்த சாலையை கடந்து செல்லும் நாகநதி, வேட கொல்லைமேடு, நஞ்சு கொண்டாபுரம் கிராம மக்கள் மற்றும் விவசாய தொழிலாளர்கள் மிகுந்த பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனர்.  அவசரத்திற்கு மருத்துவமனை செல்ல விரைந்து பயணிக்க முடியாத நிலை உள்ள இந்த சாலையை சீரமைத்து தரக் கோரி பலமுறை அரசுக்கு மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் கோபமடைந்த கிராம மக்கள் புதனன்று (அக். 4) அமிர்தியில் இருந்து வேலூர் செல்லும் அரசுப் பேருந்தை சிறை பிடித்து மறியலில் போராட்டத்தில் ஈடுபட்ட னர். அப்போது, நஞ்சு கொண்டாபுரம் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் கன்னி யப்பன் திடீரென பெட்ரோல் ஊற்றி தீக்குளிக்க முயற்சித்தார். அப்போது கணியம்பாடி காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர். இதையடுத்து, காவல் துறை மற்றும் வருவாய் துறையினர் நடத்திய பேச்சு வார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதால் மறியல் கைவிடப்பட்டது. பழுதடைந்துள்ள சாலை இதுவரை வனத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது என்றும் அதனை வருவாய்த்துறை கட்டுப்பாட்டில் மாற்றும் நடவடிக்கை மேற்கொண்டு வருவதால் சாலை அமைக்கும் பணி தாமதமாகி வருகிறது என்றும் அந்த பணிகளை விரைந்து முடித்து சாலை அமைத்து கொடுப்பதாக அதிகாரிகள் உறுதியளித்தனர்.