கிருஷ்ணகிரி, ஆக. 31- கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பல இடங்க ளில் கன மழை பெய்தது. ஊத்தங்கரை அருகே உள்ள கொல்லப்பட்டி கிராமத்திலும் கனமழை பெய்த காரணத்தால், கிராமம் முழுவதும் மழை நீர் சூழ்ந்து குளம் போல் காட்சியளிக்கிறது. தாழ்வான குடியிருப்புகளுக்குள் மழைநீர் தேங்கி நிற்கிறது. மேலும் பல மரங்கள் சாய்ந்ததால் மின் கம்பங்கள் உடைந்து கிராமமே இருளில் மூழ்கி யுள்ளது. அரசு அதிகாரிகள் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டி, ஊத்தங்கரை சாலையில் மறியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற வட்ட அலுவலர், காவல் துறை யினர் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி, நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். இதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர்.