வாச்சாத்தி வழக்கின் வெற்றியை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் தமிழகம் முழுவதும் இனிப்புகள் வழங்கியும், வெடி வெடித்து முழக்கமிட்டு வரவேற்றனர். இதன் ஒருபகுதியாக சோழிங்கநல்லூர் பகுதியில் நடைபெற்ற நிகழ்வில் கட்சியின் தென்சென்னை மாவட்ட செயலாளர் ஆர். வேல்முருகன், செயற்குழு உறுப்பினர் கே.வனஜகுமாரி, பகுதிச் செயலாளர் ப.ஜெயவேல் உள்ளிட்டோர் பங்கேற்று இனிப்பு வழங்கி, முழக்கமிட்டனர்.