கடலூர், ஜன.28- விடுதலை சிறுத்தைகள் கட்சி மாநில மாநாட்டிற்கு சென்று திரும்பி வரும் போது வேன் விபத்துக்குள்ளாகி பரங்கிப்பேட்டை ஒன்றியம் வில்லியநல்லூர் கிராமத்தைச் சேர்ந்த 3 இளைஞர்கள் அகால மரணம் அடைந்தனர். இருபதுக்கும் மேற்பட்ட இளை ஞர்கள் படுகாயம் அடைந்து மருத்துவ மனையில் இருக்கின்றனர். மரணமடைந்த இளைஞர்கள் உடல்களுக்கு வில்லிய நல்லூர் கிராமத்தில் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் சார்பில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தப்பட்டது. கட்சியின் மாநிலக் குழு உறுப்பினர்கள் எஸ். ஜி.ரமேஷ்பாபு, ஒன்றிய செயலாளர் விஜய், ஒன்றிய குழு உறுப்பினர்கள் ஹசன் முகமது, தனசேகரன், வில்லியநல்லூர் கிளைச் செயலாளர்கள் பரமசிவம், ராமர் மற்றும் வாசு, அஞ்சம்மாள், வெங்கடேசன், ராசு, பாலாஜி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.