குழந்தைகளின் ஆரோக்கியம், கல்வி, பாதுகாப்பு உரிமைகளை ஒன்றிய மாநில அரசுகள் பேணிகாக்கவேண்டும் என்ற முழக்கத்துடன் சென்னை அருண்ரெயின்போ தொண்டுநிறுவனம் சார்பில் ஹேப்பி சில்டுரன் நிகழ்ச்சி வியாழனன்று (நவ.23) நடைபெற்றது. இதில் சென்னை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கே.லட்சுமிபிரியா, சிபிசி குழு உறுப்பினர் ராஜாபாபு, இல்லபொறுப்பாளர்கள் இந்திரா, வினோத் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.