districts

img

அத்தியாவசிய பொருட்களின் விலையை பல மடங்கு உயர்த்தி வரும் ஒன்றிய பாஜக

அத்தியாவசிய பொருட்களின் விலையை பல மடங்கு உயர்த்தி வரும் ஒன்றிய பாஜக அரசை கண்டித்து கள்ளக்குறிச்சி மாவட்டம், ரிஷிவந்தியம் அடுத்த பகண்டை கூட்ரோடு  பேருந்து நிறுத்தத்தில் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் சிலிண்டர் மற்றும் சமையல் எண்ணெய் இல்லாமல் சமைக்கும் போராட்டம் நடைபெற்றது. ஒன்றிய செயலாளர் அம்பிகா தலைமை வகித்தார். பொருளாளர் இந்திராணி, மாவட்டத் தலைவர் அலமேலு, மாவட்டச் செயலாளர் தேவி ஆகியோர் உரையாற்றினர். அதேபோல் சங்கராபுரம் பேருந்து நிலையம் அருகில் ரஞ்சிதா தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. வட்டச் செயலாளர் மீனா உள்ளிட்ட பலர் உரையாற்றினர்.