கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை வட்டம் கெலமங்கலம் பேருந்து நிலையத்தில் மாற்றுத்திறனாளிகள் கழிப்பறை நீண்ட காலமாக பூட்டியே கிடப்பதால் மாற்றுத்திறனாளிகள் அவதிப்படுகிறார்கள். எனவே, உடனடியாக கழிப்பறையை பயன்பாட்டிற்கு கொண்டு வரவேண்டும் என்று மாற்றுத்திறனாளிகள் மற்றும் அவர்களது உரிமைகளுக்கான சங்கத்தின் மாவட்டச் செயலாளர் பெரியசாமி கோரிக்கை விடுத்துள்ளார்.