வேலூர், ஆக 26 -
குடியாத்தம் நடு பேட்டை அரசு பள்ளி யில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர் மீது துறை ரீதியாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
வேலூர் மாவட்டம், குடியாத்தம் நடு பேட்டை பகுதியில் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி இயங்கி வருகிறது. இப்பள்ளியில் 1500-க்கும் மேற்பட்ட மாணவிகள் படித்து வருகின்றனர். இப்பள்ளியில் சுமார் 25க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பணியாற்றுகின்றனர்.
மேலும் இப்பள்ளியில் கடந்த 14 ஆண்டு களாக அறிவியல் ஆசிரியராக ராமன் என்பவர் பணிபுரிந்து வருகிறார். இவர் செவ்வாயன்று (ஆக.22) மாணவி ஒரு வரிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ள னர். இந்த தகவலை பெற்றோரிடம் தெரி வித்துள்ளார்.
இதையடுத்து, புதனன்று (ஆக.23) பெற்றோர்கள் உடனடியாக பள்ளிக்கு சென்று தலைமை ஆசிரியரிடம் புகார் அளித்தார். அதன்பேரில் ராமனிடம் விசாரணை நடத்தினர். இது தகவலறிந்து மாணவிகளின் பெற்றோர் பள்ளியை முற்றுகையிட்டனர்.
இதனைத் தொடர்ந்து பள்ளியில் தலைமை ஆசிரியை ஜி.அகிலா, மாவட்ட கல்வி அலுவலர் எம்.அங்கு லட்சுமி, துணை காவல் கண்காணிப்பாளர் ராம மூர்த்தி, அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் சியாமளா, பெற்றோர் ஆசி ரியர் கழக தலைவர் மற்றும் மாதர் சங்க நிர்வாகிகள் பள்ளியின் வளாகத்தில் விசாரணை நடத்தினர். அதில் அவர் 7-க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு இது போன்ற பாலியல் ரீதியாக தொந்தரவு கொடுத்ததும் தெரிய வந்தது.
இதையடுத்து, அனைத்திந்திய ஜன நாயக மாதர் சங்க மாநிலச் செயலாளர் சங்கரி, மாவட்டச் செயலாளர் ஆண்டாள், தலைவர் குமாரி, பொருளாளர் அஞ்சலி, குடியாத்தம் தாலுகா செயலாளர் செம்மலர் ஆகியோர் தலைமை ஆசிரியர் சந்தித்து இது குறித்து விவரங்களை கேட்டறிந்தார்.
அப்போது, மாவட்ட குழந்தைகள் நல அலுவலர் பாதிக்கப்பட்ட மாணவர்களிடம் விசாரணை செய்துள்ளார். அதன் அறிக்கையை மாவட்ட நிர்வாகத்திடம் அறிக்கை அளித்துள்ளது தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் அவசர செயற்குழு கூட்டம் எஸ்.குமாரி தலைமையில் நடைபெற்றது. இதில் மாநில துணைச் செயலாளர் பாக்கியம் மற்றும் மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
கூட்டத்திற்குப் பின் மாவட்ட செயலாளர் ஆண்டாள் விடுத்துள்ள அறிக்கையில்,“ மாணவிகள் மீது பாலியல் சீண்டலில் ஈடுபட்ட ஆசிரியர் ராமனை இடமாற்றம் செய்ய வேண்டும். துறை ரீதியான விசாரணை துரிதப்படுத்த வேண்டும்.
வழக்குப் பதிவு செய்துள்ள காவல்துறையும் விசாரணை துரிதப்படுத்தி உரிய சட்டப்பிரிவுகளின் கீழ் உரிய நட வடிக்கை எடுக்க வேண்டும். மேலும், ஆசிரியர்கள்-மாணவர்களுக்கு உரிய விழிப்புணர்வு ஆலோசனைகளை வழங்க வேண்டும் என்றும் தெரி வித்துள்ளார்.