தமிழ்நாடு மருந்து மற்றும் விற்பனை பிரதிநிதிகள் சங்கத்தினர் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு திங்களன்று (ஆக.21) பிரச்சாரம் மேற்கொண்டனர். சங்கத்தின் கிளைத் தலைவர் பாலசுப்பிரமணியன் தலைமை தாங்கினார். மாநில செயலாளர் அருள்ஜோதி கோரிக்கைகளை விளக்கி பேசினார். அப்துல் ஹமீது உட்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.