சூளகிரி வட்டத்தில் தலித், பழங்குடி, மலைவாழ் மக்களுக்கு வீட்டுமனைப் பட்டா வழங்க வலியுறுத்தி தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் பேருந்து நிலையம் அருகில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்டத் தலைவர் முருகேஷ் தலைமை தாங்கினார். மாவட்டச் செயலாளர் சி.பிரகாஷ், சிபிஎம் மாவட்டச் செயலாளர் ஜி.கே.நஞ்சுண்டன் மற்றும் பலர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.