தாம்பரத்தில் 2012ம் ஆண்டு தனியார் பள்ளி பேருந்து ஓட்டையில் இருந்து விழுந்து மாணவி சுருதி இறந்த வழக்கில் 8 பேர் விடுதலை செய்யப்பட்டுள்ள நிலையில் தீர்ப்பை எதிர்த்து மேல் முறையீடு செய்யக்கோரி இந்திய மாணவர் சங்கம் செங்கல்பட்டு ராஜேஸ்வரி வேதாசலம் அரசு கலைக்கல்லூரி கிளை சார்பில் சாரதி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது சங்கத்தின் மாவட்டச் செயலாளர் மு.தமிழ்பாரதி, கல்லூரி மாணவர்கள் சத்யா, நவீன், சாரதி, முத்துப்பாண்டி, ஷாலினி, சர்மிளா ,காயத்ரி உள்ளிட்ட பலர் பேசினர்.