ரயிலில் சிக்கி மாணவர் கால்கள் துண்டாகிபோனது
மதுராந்தகம், செப்,23- மதுராந்தகம் வன்னி யர்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் மூர்த்தி. இவரது மகன் நேதாஜி (வயது 19).இவர் தாம்பரத்தில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வருகிறார். நேதாஜி சனிக்கிழமை காலை வழக்கம்போல் கல்லூரிக்கு செல்ல மது ராந்தகம் ரயில் நிலையத்திற்கு வந்த. சென்னை - விழுப்புரம் பயணிகள் ரயிலில் ஏறும்போது கால் தவறி ரயில் தண்டவாளத்திற்கும் ரயில் பெட்டிக்கும் இடையே சிக்கிக்கொண்டார். இதில் அவரது கால்களில் ரயில் பெட்டியின் சக்கரங்கள் ஏறி இறங்கின. இதில் நேதாஜியின் இரண்டு கால்களும் முழுவதுமாக நசுங்கி துண்டாகி போனது. இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த ரயில் நிலையத்தில் இருந்த வர்கள், மற்றும் ரயிலில் இருந்த பயணிகள் கூச்ச லிட்டனர். இதையடுத்து உடனடியாக ரயில் நிறுத்தப் பட்டது. மிகவும் ஆபத்தான நிலையில் இருந்த மாண வர் நேதாஜியை மீட்டு சென்னையில் உள்ள பொது மருத்துவமனையில் சேர்த்த னர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து செங்கல்பட்டு ரயில்வே காவல்துறையினர் விசா ரணை நடத்தி வருகிறார்கள்.
பரந்தூரில் இன்று மறியல்
காஞ்சிபுரம், செப்,23- பரந்தூரில் நிர்நீர்நிலைகளை ஆய்வு செய்ய பேராசிரி யர் மச்சநாதன் தலைமையிலான வல்லுநர்களை கொண்ட உயர்மட்ட குழு வருகிற 26 ஆம்தேதி பரந்தூருக்கு வருகிறது. இந்த குழுவினருடன் விமான நிலைய திட்டத்திற்காக நிலங்களை ஒப்படைக்க கூடிய டிட்கோவின் இயக்குனரும் வருவதால், இந்த குழு வருவதற்கு பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் ஏகனாபுரம் உள்ளிட்ட 13 கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள், டாக்டர் அம்பேத்கார் சிலை அருகே ஞாயிற்றுக்கிழமை காலை 9.30 மணிக்கு கருப்பு கொடியுடன் சாலைமறியல் போராட்டம் நடத்த இருக்கிறார்கள். இந்த போராட்டத்துக்கு பரந்தூர் விமான நிலைய எதிர்ப்பு கூட்டு இயக்கம் மற்றும் ஏகனாபுரம் கிராம குடியிருப்போர் விவசாய நல கூட்டமைப்பு அழைப்பு விடுத்துள்ளது.
வை–பை வசதியுடன் புதிய ரெப்ரிஜிரேட்டர்
சென்னை, செப். 23- எல்ஜி எலக்ட்ரானிக்ஸ் இந்தியா நிறுவனம் வை–பை வசதியுடன் ‘சைட் பை சைட்’ அதாவது இரு பக்க மும் திறக்கும் வசதியு டன் கூடிய புதிய ரெப்ரி ஜிரேட்டரை அறிமுகம் செய்துள்ளது. அதேபோல் இதில் உள்ள ப்ரீசரையும் தேவைப் படும் நேரத்தில் பிரிட்ஜ் போல மாற்றிக் கொள்ளும் வசதியும் இதில் உள்ளது. மேலும் இதன் எல்ஜி திங்க் செயலி மூலம் இந்த பிரிட்ஜ்ஜை எங்கிருந்து வேண்டுமானாலும் ஆபரேட் செய்யலாம்.
பாரம்பரிய காய்கறி சாகுபடி: விவசாயிகளுக்கு விருது
கள்ளக்குறிச்சி,செப்.23- பாரம்பரிய காய்கறி சாகுபடி செய்வதில் சிறந்து விளங்கும் விவசாயிகள் மாவட்ட அளவிலான விருந்திற்கு விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் ஷ்ரவன் குமார் தெரிவித்துள்ளார். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில். தோட்டக்கலை துறை சார்பில் பாரம்பரிய காய்கறிகள் சாகுபடி செய்வதில் சிறந்து விளங்கும் விவசாயிகளுக்கு மாவட்ட அளவிலான விருதுகள் வழங்கப்பட வுள்ளது. அதிக பாரம்பரிய காய்கறி ரகங்களை மீட்டெடுத்து பிற விவசாயிகளிடம் பாரம்பரிய காய்கறிகள் விதைகளை கொண்டு சேர்த்தல், முறையான மண்வள மேம்பாடு அங்க முறையில் விதைகளை மீட்டெடுத்தல் போன்ற காரணங்களின் அடிப்படையில் மாவட்ட அளவிலான நிபுணர் குழுவின் மூலம் சிறந்த விவசாயிகள் தேர்ந்தெடுடுக்கப் படுவார்கள் இதற்கான விண்ணப்பம் மற்றும் வழிகாட்டு நெறிமுறைகள்எ WWW.thnoticulture.gov.in என்ற இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுவுள்ளது. விருது பெறுபவர்களுக்கு முதல் பரிசாக ரூ.15ஆயிரம் இரண்டாம் பரிசாக ரூ.10ஆயிரம் வரைவோலை வழங்கப்ப டும். இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க தோட்டக்கலைத் துறை இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் அல்லது விண்ணப்பங்களை பூர்த்தி செய்து வட்டார தோட்டக்கலை அலுவலகளில் 30.9.23 க்குள் சமர்ப்பிக்க வேண்டும்.