சென்னை, ஜன. 18 - பிஎஸ்என்எல் நிறுவனத்திற்கு 5ஜி உரிமம் வழங்க வலியுறுத்தி செவ்வாயன்று (ஜன.18) சென்னையில் வாலிபர்கள் சமூக வலைதள போராட்டம் நடத்தினர். பிஎஸ்என்எல் நிறுவனத்தை பாதுகாக்க கடன் வாங்க அனுமதி அளிக்க வேண்டும், புதிய பணியிட ங்களை தோற்றுவிக்க வேண்டும், தனியார் நிறுவனங்களின் கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டும்; அந்த நிறுவனங்களின் கட்டண கொள்ளையை தடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் ‘செல்பி வித் பிஎஸ்என்எல்’ போராட்டத்திற்கு அறைகூவல் விடுத்தது. இதன்படி, வாலிபர் சங்க ஊழியர்கள் பிஎஸ்என்எல் நிறுவனம் முன்பு நின்று ‘செல்பி’ எடுத்தும், குழுகுழுவாக சென்று பிரச்சாரம் செய்துதனர். அந்த புகைப்படங்களை சமூக வலைதளங்களில் #RevokeTelecomPriceHike என்ற ஹாஷ்டேக்கில் டிரெண்ட் செய்தனர். இந்த ஹாஷ்டேக்கானது தமிழக அளவில் சிலமணி நேரம் முதலிடத்தில் இருந்தது. உலக பொருளாதார மாநாட்டில் இணையவழியாக பிரதமர் மோடி பேசிக் கொண்டிருக்கும் போது டெலி பிராம்ட்டர் பழுதானது. இதனால் சில நிமிடங்கள் அவர் பேச்சு தடை பட்டது. சுயமாக பேச முடியாத பிரதமர் என விமர்சித்து #TeleprompterPM என்ற ஹாஷ்டேக் தேசிய அளவில் டிரெண்டில் இருந்தது. அந்த நேரத்தில் வாலிபர் நடத்தியஇணைய தள போராட்டம் தமிழகஅளவில் முதலிடத்தில் இருந்தது குறிப்பி டத்தக்கது. இந்த போராட்டத்தின் ஒருபகுதியாக தென்சென்னை மாவட்டத்தில் உள்ள 10 பகுதிக்குழுக்களில்43 மையங்களில் இந்த நூதன போராட்டம் நடைபெற்றது.