விழுப்புரம், மே 14-
விழுப்புரம் மாவட்டத்தில் பெருகிவரும் கள்ள சாராயம் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களை விற்பனை செய்ப வர் மீது கடுமையான நடவடிக்கை எடுத்து முற்றிலும் ஒழிக்க மாவட்ட நிர்வாகமும், மாவட்ட காவல்துறையும் இணைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் என்.சுப்பிரமணியன் வலியுறுத்தி யுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:-
விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் வட்டத்திற்குட்பட்ட எக்கியார் குப்பத்தில் கள்ள சாராயம் குடித்ததில் 5 பேர் பலியாகி உள்ளனர். அவர்களுக்கு இரங்கலையும் குடும்பத்தினருக்கு ஆறுதலையும் தெரி வித்துக்கொள்கிறோம். மேலும், மருத்துவ மனைகளில் சிகிச்சை பெற்றுவருவோர் முழுமையாக குணமடைந்து நலம்பெற வேண்டுகிறோம். இம், மாவட்டத்தில் கஞ்சா மற்றும் போதை பொருட்களின் நடமாட்டம் அதிக ரித்து வருவதை தடுப்பதற்கு காவல் துறைக்கு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று எங்கள் கட்சியின் சார்பில் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். ஆனாலும், போதைப் பொருட் கள் ஒழிப்பு நடவடிக்கை முழுமையாக இல்லை. இதற்கு உதாரணம் தான் மரக்காணம் சம்பவம். மேலும், போதை பொருட்கள் நடமாட்டத்தால் பாலியால் வன் கொடுமை, பாலியல் வண்புணர்ச்சி கொடு மைகளும் அதிகரித்து வருகிறது,
இந்நிலை மாற இது போன்ற துயர சம்பவங்கள் ஏற்பட்டு வருகிறது. இனி வரும் காலங்களில் இது போன்ற துயர சம்பவங்கள் ஏற்படாத வகையில் மாவட்ட நிர்வாகமும், மாவட்ட காவல் துறையும் இணைந்து செயல்பட்டு கள்ள சாராயம், கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களை தடுக்க கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்திருக்கிறார்.