புதுச்சேரி. பிப், 22- புதுச்சேரி அரசின் செல வினங்களுக்கான இடைக்கால பட்ஜெட்டை நிதி பொறுப்பு வகிக்கும் முதல் அமைச்சர் ரங்கசாமி சட்டப்பேரவையில் வியாழனன்று (பிப்.22) தாக்கல் செய்தார். ஏப்ரல் முதல் ஆகஸ்ட் வரையிலான 5 மாத அரசு செல வினங்களுக்கு ரூ.4 ஆயிரத்து 634 கோடியே 29 லட்சத்து 85 ஆயிரத்துக்கான இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட்டுக்கு குரல் வாக்கெடுப்பு மூலம் அனுமதி வழங்கப்பட்டதாக பேரவைத்தலைவர் செல்வம் அறிவித்தார். தொடர்ந்து சட்ட முன்வரைவு களுக்கு ஒப்புதல் பெறப்பட்ட பின்னர் கூடுதல் செலவின கோரிக்கை பேரவை முன் தாக்கல் செய்யப்பட்டது. திமுக, காங்கிரஸ் வெளிநடப்பு முன்னதாக இரங்கல் குறிப்பு வாசிப்பு முடிந்த உடன் குறுக்கிட்டு பேசிய எதிர்கட்சித்தலைவர் சிவா, ஒன்றிய அரசு தாக்கல் செய்த பட்ஜெட்டில் புதுவைக்கான நிதியை குறைத்துவிட்டனர். நாடாளு மன்ற தேர்தல் குறுக்கிட்டாலும் பல மாநிலங்களில் முன்கூட்டியே தயாராகி, முழுமையான பட்ஜெட்டை தாக்கல் செய்து வருகின்றனர். முழுமையான பட்ஜெட் தாக்கல் செய்வதில் உங்களுக்கு என்ன பிரச்சினை? என கேள்வி எழுப்பினார். குறைந்தபட்சம் சட்டப்பேரவை கூட்டத்தை 3 நாட்களாவது நடத்த வேண்டும். ஒரே நாளில் கூட்டத்தை முடிக்கிறீர்கள். இன்னும் 6 மாதம் கழித்துதான் சட்டப்பேரவை கூட்டுவீர்களா என வினவினார். அவருக்கு ஆதரவாக திமுக எம்எல்ஏக்கள் நாஜிம், அனிபால் கென்னடி, சம்பத், செந்தில்குமார், நாக தியாக ராஜன், காங்கிரஸ் எம்எல்ஏக்கள் வைத்தியநாதன், ரமேஷ்பரம்பத் ஆகியோரும் எழுந்து பேசினர். அதற்கு உரிய பதிலளிக்காத நிலையில் திமுக, காங்கிரஸ் உறுப்பினர்கள் அவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர். பேரவைகூட்டம் ஒத்திவைப்பு புதுச்சேரி சட்டப்பேரவை வியாழனன்று காலை 9.45 மணிக்கு கூடியது.பேரவையில் முதல அமைச்சர் ரங்கசாமி இடைக் கால பட்ஜெட்டை தாக்கல் செய்தார். அதை தொடர்ந்து பேரவையில் சட்ட திருத்த மசோதாக்களுக்கு அனுமதி பெறப்பட்டது. இதையடுத்து காலை 10.55 மணிக்கு சட்டசபை யின் அனைத்து அலுவல்களும் முடிவடைந்தது என்று பேரவைத்தலைவர் செல்வம் அறி வித்து சட்டப்பேரவை கூட்டத்தை காலவரையின்றி ஒத்திவைப்பதாக அறிவித்தார். சட்டப்பேரவை கூட்டம் கூடிய ஒரு மணி நேரத்திலேயே கூட்டம் முடிவடைந்தது என்பது குறிப் பிடத்தக்கது.