districts

img

இருளர் இன மக்கள் பட்டா கேட்டு ஆர்டி‌ஒ அலுவலகம் முன்பு காத்திருக்கும் போராட்டம்

திருவள்ளூர், நவ. 21- வருவாய்த்துறையினர் எழுத்து பூர்வமாக உறுதியளித்து 3 ஆண்டு கள் கடந்த பின்னரும் பட்டா வழங்காத  நிலையில் செவ்வாயன்று (நவ 21), இருளர் இன மக்கள் பட்டா கேட்டு திருவள்ளூர் ஆர்டி‌ஒ  அலுவலகம் முன்பு காத்திருக்கும் போராட்டம் நடைத்தினர். திருவள்ளூர் வட்டம்,  மப்பேடு ஊராட்சி கே.கே.நகரில் 16 இருளர் இன குடும்பங்கள், குப்பத்து பாளை யத்தில் 18 குடும்பங்கள், வாசனம் பட்டில் 16 குடும்பங்கள், வாயலூரில் 7 குடும்பங்கள், திருப்பாச்சூர் வசந்தம்  நகரில் 11 குடும்பங்கள். பாக்குபேட்டை யில் 6 குடும்பங்கள். ஊத்துக்கோட்டை வட்டம், திருக்கண்டலம் ஊராட்சி,  அண்ணா நகரில் 62 குடும்பங்கள், அரியத்தூர் அப்துல் கலாம் நகரில் 24 குடும்பங்கள்,  மெய்யூர் ஊராட்சி வெம்பேட்டில் 29 குடும்பங்கள், பூந்தமல்லி ஊத்துக்குழிமேடு 11 குடும்பங்கள், ஆவடி நெமிலிச்சேரி இருளர் பாளை யம் 10 குடும்பங்கள் என 210 இருளர்  இன குடும்பங்களுக்கு குடிமனை பட்டா கேட்டு கடந்த மூன்று ஆண்டு களாக திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம், ஊத்துக்கோட்டை, ஆவடி,  பூந்தமல்லி, ஆகிய வட்டாட்சி யர் அலுவலகங்கள் முன்பு பல கட்ட போராட்டங்களை தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் சார்பில் நடைபெற்றன. போராட்டத்தின் முடிவில் அடுத்த ஒரு மாதத்தில் பட்டா வழங்கப்படும் என எழுத்து பூர்வமாக அதிகாரிகள் உறுதியளித்திருந்தனர்.

மாவட்ட ஆட்சியரும் ஏற்கெனவே உறுதியளித்திருந்தார். இந்த நிலையில் வருவாய்த்துறை யினர் எழுத்து பூர்வமாக உறுதியளித்து  பின்னரும் பட்டா வழங்காத நிலையில்,  செவ்வாயன்று (நவ 21), திருவள்ளூர் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு 11 கிராமங்களை சேர்ந்த இருளர் இன மக்கள் காத்திருக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தையொட்டி திருவள்ளூர் கோட்டாட்சியரின் நேர்முக உதவியாளர் விஜயகுமாரி சங்க  தலைவர்களை அழைத்து பேசினார். அப்போது அடுத்த 10 நாட்களில் உறுதியாக பட்டா வழங்கப்படும். சில இடங்களில் தனியார் நிலங்களை வாங்கி பட்டா வழங்க உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதற்கான ஆவணங்களின் நகல்களை தலைவர்களிடம் வழங்கி னார். காத்திருக்கும் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த வாசனம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த தமிழரசி என்ப வரும் அடையாள பூர்வமாக ஒரு பட்டா வழங்கப்பட்டது. இதன் மூலம் அம்மக்களுக்கு ஒரு நம்பிக்கை வந்துள்ளது. இதற்கு தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் மாவட்ட செயலா ளர் ஆர்.தமிழ்அரசு தலைமை தாங்கினார். இதில் சங்கத்தின் மாநில துணைச் செயலாளர் இ.கங்காதுரை, மாநில துணைத்தலைவர் ஏ.வி.சண்மு கம், மாவட்ட பொருளாளர் எஸ்.குமரவேல், பூண்டி ஒன்றிய செயலாளர் கே.முருகன், விவசாயிகள் சங்கத்தின் மாவட்ட துணைத் தலைவர் பி.ரவி,  பகுதி செயலாளர் விஜயகுமார்,  மலைவாழ் மக்கள் சங்கத்தின் மாவட்ட நிர்வாகிகள் ராமசாமி,  அற்புதம், தேவி, இ.எழிலரசன், சுதர்ச னம், சரோஜா ஆகியோர் பேசினர்.