சென்னை, மார்ச் 1 பிரதமர் நரேந்திர மோடி, மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களுடன் வெள்ளிக்கிழமை (ஏப்.1) கலந்துரையாடுகிறார். ஆண்டுதோறும் நடைபெறும் ‘பரிக்ஷா பே சர்ச்சா ’’ என்ற நிகழ்ச்சியில், மாணவர்களுக்கு தேர்வு தொடர்பான மன அழுத்தத்தை களையவும், அவர்கள் எழுப்பும் கேள்விகளுக்கு பிரதமர் நேரடி யாக பதிலளிக்கிறார். தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்கள் ஆளுநர் மாளிகைக்குச் சென்று மாநில ஆளுநர்கள் முன்னிலையில் பிரதமருடன் கலந்துரையாட உள்ளனர்.