திருவள்ளூர், ஆக.9-
பொன்னேரி அரசு மருத்துவமனையில் கடந்த 11 மாதங்களாக பூட்டிக் கிடக்கும் ரத்த வங்கியை திறக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என செவ்வாயன்று (ஆக.8)பேச்சுவார்த்தையின் போது நிர்வாகம் ஒப்புதல் அளித்ததால் போராட்டம் தற்காலிகமாக கைவிடப்பட்டது
. திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அரசு பொது மருத்துவமனைக்கு நாள் ஒன்றுக்கு 500 -க்கும் மேற்பட்ட புறநோயாளி கள் வந்து சிகிச்சை பெற்று செல்கின்றனர். இங்கு அவசர விபத்து சிகிச்சை பிரிவு, பிரசவம், சர்க்கரை நோய், மூச்சுத் திணறல், டெங்கு, மலேரியா காய்ச்சல் உள்ளிட்ட பல்வேறு நோய்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.
நோயாளிகளுக்கு அறுவைசிகிச்சைக்கு ரத்தம் தேவைப்படும் பட்சத்தில் ரத்த தானம் செய்பவர்கள், திருவள்ளூர் அரசு மருத்து வமனைக்கு சென்றுதான் கொடுக்க வேண்டிய நிலை உள்ளது. பிறகு அங்கிருந்து தான் ரத்தம், பொன்னேரி அரசு மருத்துவ மனையில் அவசர சிகிச்சையில் இருப்ப வருக்கு கொண்டுவந்து கொடுக்கப்படு கிறது.
ஒரு யூனிட் ரத்தம் கொடுக்க வேண்டும் என்றால் கூட 50 கி.மீ. தூரம் உள்ள திரு வள்ளூர்அரசு மருத்துவமனைக்கு செல்ல வேண்டிய அவல நிலை உள்ளது.
பொன் னேரியை அருகில் உள்ள டி.வி.புரத்தில் மகாதேவி (வயது 26), என்பவருக்கு உடலில் ரத்த தட்டணுக்கள் குறைந்துள்ளது. இதனை சரிசெய்ய பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு வந்துள்ளனர். அந்த வசதி பொன்னேரியில் இல்லாததால், சென்னை ஸ்டான்லி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். காலதாமதமாக சென்றதால் மரணமடைந்தார் என குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.இப்படி பாதித்தவர்கள் தனியார் மருத்துவமனைக்கு சென்று பல லட்சக்கணக்கான ரூபாய் செலவிட வேண்டிய நிலை உள்ளது. பூட்டி கிடைக்கும் ரத்த வங்கி பொன்னேரி அரசு மருத்துவமனையில் ரூ. 25 லட்சம் மதிப்பீட்டில் ரத்த வங்கி கட்டிடமும், ரூ.50 லட்சத்தில் ரத்த வங்கி கருவிகள் பயன்படுத்தாமலேயே பாழ டைந்து வருகிறது. இந்த நிலையில் கடந்த 11 மாதங்களாக பூட்டிக் கிடக்கும் ரத்த வங்கியை செவ்வாயன்று (ஆக-8), இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் சார்பில் திறக்கும் போராட்டம் நடைபெறும் என அறிவித்தனர். இந்த சூழலில் பொன்னேரி அரசு மருத்துவமனையின் தலைமை மருத்துவர் அசோகன் சங்கத்தின் தலை வர்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினார்.
அப்போது ரத்த வங்கியின் கட்டிடத்தின் கட்டுமான பணிகள் முழுமையாக நிறைவு பெற்று ஒப்படைத்துள்ளனர். ரத்த வங்கிக்கு தேவையான கருவிகள் வந்தவுடன், ஒன்றிய அரசின் அனுமதி பெற்று அடுத்த ஒரு மாதத்தில் ரத்த வங்கிய திறக்கப்படும் என உறுதியளித்தார். இதனை தொடர்ந்து போராட்டம் தற்காலிகமாக கைவிடப்பட்டது.
பொன்னேரி காவல் நிலைய ஆய்வாளர் சின்னதுரை முன்னிலையில் நடைபெற்ற இந்த பேச்சுவார்த்தையில் வாலிபர் சங்கத் தின் ரத்ததான மாவட்ட அமைப்பாளர் எஸ்.கலையரசன், மாவட்ட செயலாளர் டி.மதன், பொன்னேரி பகுதி தலைவர் எம்.தினேஷ், பகுதி செயலாளர் கே.ஜெகன், மீஞ்சூர் பகுதி செயலாளர் எம்.சிவா, கவரைப்பேட்டை பகுதி தலைவர் ஆர்.ஜெயகுமார், துணை நிர்வாகிகள் நாகராஜ், பாரதிதாசன், புருஷேத்தமன்,மாணவர்சங்கத்தின் மாவட்டச்செயலாளர் டிக்சன் ஆகியோர் கலந்து கொண்டனர்.