மீஞ்சூரில் வாலிபர் மர்மக் கொலை
திருவள்ளூர், ஏப்.28- திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூரில் ஞாயிறன்று வாலிபர் ஒருவர் கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்தார். அவரது உடல் போர்வையால் சுற்றப்பட்ட நிலையில் காணப்பட்டது. அந்த வாலிபரின் கை மட்டும் தனியாக வெட்டப்பட்டு காந்தி ரோட்டில் கிடந்தது. இது பற்றி அவர்கள் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் மீஞ்சூர் போலீசார் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பார்வை யிட்டனர். அந்த பிணத்தை போலீசார் கைப்பற்றிய போது அங்கு அவர்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. வாலிபரின் உடல் மட்டுமே அங்கு கிடந்தது. தலை தனியாக துண்டிக்கப்பட்டு இருந்தது. ஆனால் தலையை காணவில்லை. மேலும் உடலில் இருந்து துண்டிக்கப்பட்ட கையும் இங்கு தனியாக கிடந்தது. அந்த வாலிபரின் உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். இந்நிலையில் சம்பவ இடத்திற்கு ஆவடி போலீஸ் இணை ஆணையர் பால கிருஷ்ணன், உள்ளிட்ட காவல்துறை அதி காரிகள் சென்று விசாரணை நடத்தினார்கள். அந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமரா காட்சிகளை கைப்பற்றி ஆய்வு செய்து விசாரித்தனர். போலீசார் நடத்திய முதல் கட்ட விசாரணையில் அந்த வாலிபரை வேறு இடத்தில் வைத்து கொலை செய்துவிட்டு போர்வையால் சுற்றி எடுத்து வந்து மீஞ்சூர் டி.எச். சாலை, காந்தி ரோடு பகுதியில் நடு ரோட்டில் வீசி சென்றிருப்பது தெரிய வந்தது. போலீசார் நடத்திய விசாரணையில் கொலை செய்யப்பட்ட வாலிபர் பொன்னேரியை அடுத்த வஞ்சிவாக்கம் பகுதியை சேர்ந்த அஸ்வின் குமார்(25) என்பது தெரியவந்தது. இவர் பிரபல ரவுடி என கூறப்படுகிறது. அவர் மீது திருப்பாலைவனம் போலீசில் கஞ்சா கடத்தல் உள்ளிட்ட 3 வழக்குகள் உள்ளன. அஸ்வின் குமாருக்கு திருமணம் முடிந்து 3 மாதங்கள் ஆகியுள்ளது. இந்த நிலையில் கொலை செய்யப்படு வதற்கு முன்பு அஸ்வின் குமாரை அவரது கூட்டாளி அஜய் சனிக்கிழமை மாலை அழைத்து சென்று உள்ளார். அதன் பிறகுதான் அவர் கொலை செய்யப்பட்டுள்ளார். எனவே அஜய் மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இதற்கிடையே போலீசார் நடத்திய தேடுதல் வேட்டையில் கொலை செய்யப்பட்ட அஸ்வின் குமாரின் தலை கண்டு பிடிக்கப்பட்டது. அவரது தலை சோழ வரம் அருகே உள்ள பெருங்காகூர் காலனி சுடுகாட்டில் துண்டிக்கப்பட்ட நிலை யில் கிடந்தது. இந்த தலையை போலீசார் கைப்பற்றினார்கள். இதற்கிடையே அஸ்வின் குமாரை கடைசியாக வெளியே அழைத்து சென்ற அஜயை போலீசார் தேடினார்கள். ஆனால் அவர் தப்பி ஓடி தலைமறைவாகி விட்டார். அவரை போலீசார் தேடி வருகின்றனர்.
போலி இ-சேவை மையம் நடத்தியவர் கைது
விழுப்புரம், ஏப்.28- திண்டிவனத்தில் செஞ்சி ரோடு பகுதியில் அரசு அனுமதி பெறாமல் போலி யாக இ-சேவை மையம் நடத்தி போலி யான ஆவணங்கள் தயார் செய்து கொடுத்த வரை காவல்துறையினர் கைது செய்தனர். விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம், சஞ்சீவிராயன் பேட்டை முதல் தெருவை சேர்ந்த சந்திரசேகர் என்பவரின் மகன் சதீஷ்குமார் (30),இவர் திண்டிவனத்தில் செஞ்சி ரோட்டில் தனியார் ஸ்டுடியோவும் இணையதள இ-சேவை மையம் நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் இந்த இ- சேவை மையத்தில் அரசு அனுமதி பெறாமல் குடும்ப அட்டை, ஆதார் அட்டையில் முகவரி மாற்றம், போட்டோ மாற்றம், புதிய குடும்ப அட்டை பெறுவதற்கான குடும்ப - அட்டையிலிருந்து பெயர் நீக்கம் செய்வது. விண்ணப்பதாரரின் பெயர் தவறான எரிவாயு இணைப்பு தயார் செய்வது என போலியான ஆவணங்கள் தயார் செய்து போலியாக இ-சேவை நடத்தி வருவதாக திண்டிவனம் வருவாய் துறை வட்ட வழங்கல் அலுவலகத்தில் ரகசிய தகவல் கிடைத்தது. உடனடியாக அரசு அனுமதியின்றி இயங்கிய அந்த இ-சேவை மையத்தில் போலீ சார் பாதுகாப்புடன் தனி வட்டாட்சியர் பாவேந்தன், தனி வருவாய் அலுவலர் பிர பாகரன் மற்றும் போலீசார் சம்பந்தப்பட்ட இ சேவை மையத்துக்கு நேரில் ஆய்வு மேற்கொண்டார். ஆய்வில் அரசு அனுமதி யின்றி இ-சேவை மையம் இயங்கியது தெரிய வந்தது, இங்கு ஆதார் அட்டைகள், குடும்ப அட்டைகள், வாக்காளர் அட்டையில் பெயர் மாற்றம் உள்ளிட்ட அரசு சேவைகளை செய்வது கண்டறியப்பட்டது. இதைத்தொடர்ந்து அவர் மீது திண்டி வனம் காவல் நிலையத்தில் வட்ட வழங்கல் அலுவலர் புகார் அளித்ததை தொடர்ந்து திண்டிவனம் நகர போலீசார் வழக்குப்பதிவு செய்து சதீஷ்குமாரை கைது செய்தனர்.
15 இடங்களில் 100 டிகிரி மேல் வெயில் சுட்டெரித்தது
சென்னை, ஏப். 28- தமிழ்நாட்டில் 15 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட் மற்றும் அதற்கும் மேல் வெயில் சுட்டெரித்தது. குறிப்பாக திருப்பத்தூர் 107, தருமபுரி, வேலூரில் தலா 106 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் பதிவாகி உள்ளது. திருத்தணி 105, கரூர் பரமத்தி, சேலம் தலா 104, மதுரை விமான நிலையம், மதுரை நகரம், கோவை தலா 103 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் கொளுத்தியது.
காலமானார்
சென்னை, ஏப். 28 - தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் தென் சென்னை மாவட்ட துணைச் செயலாளர் ஏ.என்.சம்பத்குமார் ஞாயிறன்று (ஏப்.28) மரணமடைந்தார். அவருக்கு வயது 68. மேடவாக்கம் மற்றும் தாம்பரம் பகுதியில் மாற்றுத்திறனாளிகளுக்கு உதவி செய்வதில், சங்கத்தை வளர்த்தெடுப்பதில் மிகச்சிறப்பாக செயல்பட்டவர். அன்னாரது உடல் காஞ்சிபுரத்தில் உள்ள இடுகாட்டில் அடக்கம் செய்யப்பட்டது.
காசிமேட்டில் கத்தியை காட்டி மிரட்டியவர் கைது
சென்னை, ஏப். 28- காசிமேட்டில் பொதுமக்களிடம் கத்தியைக் காட்டி மிரட்டியவர் கைது செய்யப்பட்டார். காசிமேடு திருவள்ளுவர் நகரைச் சேர்ந்தவர் லோகேஷ் (28). இவர் மீது கொலை முயற்சி வழக்கு உட்பட 14 வழக்குகள் உள்ளது. தன்னை ஏரியாவில் பெரிய ஆளாக காண்பிப்பதற்காக குடிபோதையில் கையில் கத்தியை காட்டி பொதுமக்களை அச்சுறுத்தி தகராறு செய்துள்ளார். இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள், இதுகுறித்து காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த காசிமேடு காவல் துறையினர் லோகேஷை கைது செய்தனர்.
தனியார் ஆலை தொட்டியில் விழுந்த ஊழியர் பலி
பல்லாவரம், ஏப்.28- குன்றத்தூர் அருகே தனியார் கம்பெனியின் கெமிக்கல் தொட்டியில் தவறி விழுந்த ஊழியர் பரிதாபமாக உயிரிழந்தார். கடலூர் மாவட்டம், பண்ருட்டி தாலுகாவை சேர்ந்தவர் பிரவீன்குமார் (20). இவர், குன்றத்தூர் அடுத்த திருமுடிவாக்கம் சிட்கோவில் உள்ள கார் உதிரி பாகங்கள் தயாரிக்கும் கம்பெனியில் வேலை செய்து வந்தார். இந்நிலையில், வெள்ளியன்று பிரவீன்குமார் வழக்கம்போல் பணிக்கு சென்றார். அப்போது, 55 டிகிரி கொதி நிலையில் இருந்த சோடியம் ஹைட்ராக்சைடு கெமிக்கல் நிரப்பப்பட்ட தொட்டியில் உள்ள நீரில் சுற்றிக்கொண்டிருந்த இயந்திரம் திடீரென பழுதானது. இதையடுத்து, பிரவீன்குமார் கெமிக்கல் தொட்டியின் மேலே ஏறி, மெஷின் சரி செய்து கொண்டிருந்த போது, எதிர்பாராத விதமாக கெமிக்கல் தொட்டியில் தவறி விழுந்தார். இதில், உடல் வெந்து, வலியால் அலறி துடித்தார். இதனை கண்டு அதிர்ச்சியடைந்த சக ஊழியர்கள், பிரவீன்குமாரை கெமிக்கல் தொட்டியில் இருந்து மீட்டு, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு, ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வந்த பிரவீன் குமார், சனிக்கிழமையன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். தகவலறிந்து, சம்பவ இடத்திற்கு சென்ற குன்றத்தூர் போலீசார், பிரவீன் குமார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அதே மருத்துவமனையில் அனுமதித்தனர். மேலும், இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, கம்பெனி நிர்வாகத்திடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சாலை விபத்தில் 3 பேர் உயிரிழப்பு
கிருஷ்ணகிரி, ஏப். 28- கிருஷ்ணகிரி அடுத்த பெரியபனமுட்லு பகுதியில் நடந்த சாலை விபத்தில் 3 பேர் உயிரிழந்துள்ளார். சாலையில் சென்ற கார் கட்டுப்பாட்டை இழந்து 2 இருசக்கர வாகனங்கள் மீது மோதியது. இதில் கைக்குழந்தை, 2 வயது பெண் குழந்தை உட்பட 3 பேர் உயிரிழந்தனர். விபத்தில் காயமடைந்த குழந்தையின் பெற்றோர், உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கோடைகால பயிற்சி முகாம்: விளையாட்டு வீரர்களுக்கு அழைப்பு
செங்கல்பட்டு ஏப்.28- செங்கல்பட்டு மாவட்ட அளவிலான கோடைகால பயிற்சி முகாம் ஏப்ரல் 29 முதல் மே 13 வரை நடைபெறுவதால் விளையாட்டு வீரர், வீராங்கனைகள் கலந்து கொள்ள மாவட்ட ஆட்சியர் அழைப்பு விடுத்துள்ளார். தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் செங்கல்பட்டு மாவட்ட விளையாட்டுப் பிரிவின் சார்பாக கோடைகால பயிற்சி முகாம் 2024 ஆம் ஆண்டிற்கு ராஜேஸ்வரி வேதாச்சலம் அரசு கலைக் கல்லூரி மற்றும் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் , ஏப்ரல் 29 முதல் மே 13 வரை 15 நாட்கள் நடைபெற உள்ளது. இதுகுறித்த செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் ச. அருண்ராஜ் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது:- கோடைகால பயிற்சி முகாம் இராஜேஸ்வரி வேதாசலம் அரசு கலைக் கல்லூரியில் தடகளம், கால்பந்து, கபடி, வாலிபால் மற்றும் செங்கல்பட்டு அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் கூடைப்பந்து , போன்ற 5 விளையாட்டுகளுக்கான பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இப்பயிற்சி முகாமில் பங்கேற்று ரூ.200 பயிற்சி கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது இந்த பயிற்சி முகாமில் 18 வயதிற்குட்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொள்ளலாம். பயிற்சி முகாமில் கலந்து கொள்ளும் அனைவருக்கும் பங்கு பெற்றதற்கான சான்று வழங்கப்படும். இப்பயிற்சி முகாமில் பங்கேற்பதற்கு மாவட்ட விளையாட்டு அலுவலகம் 2வது தளம் அறை எண் எப்.203 மாவட்ட ஆட்சியர் வளாகம் செங்கல்பட்டு, அலுவலகத்தில் நேரில் தொடர்பு கொண்டு தங்கள் பெயரை பதிவு செய்து பயிற்சியில் கலந்து கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு செங்கல்பட்டு மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் தொலைபேசி எண். 7401703461 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
ஜேஇஇ நுழைவு தேர்வில் மதிப்பெண் குறைந்ததால் மாணவர் தற்கொலை
சென்னை, ஏப்.28- தாம்பரம் அருகே ஜேஇஇ நுழைவு தேர்வில் குறைந்த மதிப்பெண் பெற்ற தால், விரக்தியில் மாணவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது. சென்னை தாம்பரம் சேலையூர் அடுத்த திருவஞ்சேரி பகுதியில் உள்ள அடுக்கு மாடி குடியிருப்பில் வசித்து வருபவர் பென்னிவர்ட். அவருடைய மகன் இவான் ஜோஸ்வா (17). சேலையூர் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார். இவர் தற்போது பிளஸ்-2 பொதுத்தேர்வு எழுதி தேர்வு முடிவுக்காக காத்திருந்தார். ஐஐடி, என்ஐடி போன்ற மத்திய உயர்கல்வி நிறுவனங்களில் இளநிலை படிப்புகளில் சேர்வதற்காக கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஜேஇஇ நுழைவுத் தேர்வு எழுதி இருந்தார். சனிக்கிழமையன்று காலை வழக்கம் போல் தந்தை பென்வர்ட் வேலைக்கு சென்று விட்ட நிலையில், அவருடைய மனைவி தோழியை பார்ப்ப தாக சென்று விட்டார். மகன் இவான் ஜோஸ்வா மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளார். மாலையில் வீடு திரும்பிய அவரது பெற்றோர் கதவு உள்பக்கம் பூட்டப்பட்ட தால், அக்கம் பக்கத்தினர் உதவியுடன் வீட்டின் பின்புறம் உள்ள கதவின் பூட்டை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அப்போது படுக்கை அறையில் உள்ள மின்விசிறியில் இவான் ஜோஸ்வா தூக்குப்போட்டு தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து உடனடியாக சேலையூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் மாணவர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மாணவர் சாவு குறித்து பெற்றோரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அதில், ஜே.இ.இ. நுழைவுத் தேர்வு முடிவு கள் கடந்த 24 ஆம் தேதி வெளியான நிலை யில் இவான் ஜோஸ்வா இதில் மதிப்பெண் குறைவாக பெற்றிருந்ததாக கூறப்படு கிறது. இதனால் ஏற்பட்ட மன உளைச்சலில் அவர் தற்கொலை செய்து கொண்டது விசாரணையில் தெரியவந்தது.
பணிநிறைவு பெற்ற ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா
திருவண்ணாமலை, ஏப். 28- தமிழக ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் கீழ்பென்னாத்தூர் வட்டாரக் கிளை சார்பில் 2023-24 கல்வியாண்டில் பணிநிறைவு பெற்ற 15 ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா வேட்டவலத்தில் நடைபெற்றது. வட்டார தலைவர் திலகம் தலைமை தாங்கினார். மகளிர் அணி செயலாளர் பத்மாவதி, துணைத்தலைவர் ராஜேஸ்வரி முன்னிலை வகித்தனர். துணைத்தலைவர் சர்தார் வரவேற்றார். வட்டார செயலாளர் குமார் வேலை அறிக்கையையும், வட்டார பொருளாளர் அறிவரசு வரவு செலவையும் சமர்பித்தனர். மாநில பொதுச்செயலாளர் மற்றும் ஜேக்டோ-ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளர் தாஸ், மாநில தலைவர் லட்சுமிபதி, மாநில துணைப் பொதுச்செயலாளர்கள் முருகன், புருஷோத்தமன் பணிநிறைவு பெற்ற ஆசிரியர்களுக்கு பொன்னாடை போர்த்தி, நினைவுப்பரிசு வழங்கி சிறப்புரை ஆற்றினர். இதில் மாவட்ட தலைவர் அன்பழகன், கல்வி மாவட்ட பொறுப்பாளர்கள் நமச்சிவாயம், ஜெயராமன், வேல்முருகன், கூட்டுறவு சிக்கனக் கடன் சங்க முன்னாள் தலைவர் செந்தில்குமரன், மாநில பொதுக்குழு உறுப்பினர் சௌந்தரராஜன், மாநில செயற்குழு உறுப்பினர் பாலமுரளி, மாவட்ட துணைத்தலைவர் விஜயகுமார் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். பணிநிறைவு பெற்ற ஆசிரியர்கள் வெங்கடேசன், இளங்கோவன், சகாயமேரி, ஜெய்கர், சிவசக்தி, கிரேசி, சரோஜா, ரெஜினாமேரி, ஜெயலட்சுமி, மேரிசுசிலா, பாத்திமாமேரி, ஸ்டெல்லாமேரி உள்ளிட்ட 15 பேர் ஏற்புரை நிகழ்த்தினர். துணைச்செயலாளர் உஷாராணி அனைவருக்கும் நன்றி கூறினார்.
திருவண்ணாமலையில் 8 இடங்களில் நீர்மோர் பந்தல்
திருவண்ணாமலை, ஏப்.28- திருவண்ணாமலையில் திமுக சார்பில் 8 இடங்களில் நீர்மோர் பந்தலை மாநில மருத்துவரணி துணை தலைவர் எ.வ.வே.கம்பன் தொடங்கிவைத்தார். திருவண்ணாமலை திமுக சார்பில் நீர்மோர் குடிநீர் பந்தல்களை அதிக இடங்களில் திறந்துவைக்க வேண்டுமென அமைச்சர் எ.வ.வேலு கேட்டுக்கொண்டுள்ளார். அதன்படி மாவட்டத்தில் நூற்றுக்கான இடங்களில் குடிநீர் பந்தல்கள் திறக்கப்பட்டு வருகிறது அதனை முறையாக பராமரித்து பொதுமக்களுக்கு குடிநீர் மோர் போன்றவற்றை வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி திருவண்ணாமலை நகரில் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களான வேலூர் சாலை பேரறிஞர் அண்ணா நுழைவு வாயில் அருகிலுள்ள கலைஞர் சிலை அருகில் உள்ளிட்ட 8 இடங்களில் நீர்மோர் பந்தல் திறப்பு விழா நடைபெற்றது. இந்த விழாவுக்கு நகர செயலாளர் ப.கார்த்திவேல்மாறன் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு மாநில மருத்துவரணி துணை தலைவர் எ.வ.வே.கம்பன் தண்ணீர் மற்றும் மோர் பந்தலை திறந்துவைத்து பொதுமக்களுக்கு தர்பூசணி இளநீர் பழச்சாறு கரும்புச்சாறு ஆகியவற்றை வழங்கினார்.
புதிய கண்டுபிடிப்புகள்: காப்புரிமைக்காக விண்ணப்பிப்பதில் தமிழ்நாடு முதலிடம்
சென்னை, ஏப். 28- இந்திய மென்பொருள் நிறுவனங்கள் சங்கமான நாஸ்காம் புதிய கண்டுபிடிப்பு களுக்கான காப்புரிமைகள் குறித்த விரிவான ஆய்வறிக்கையை வெளி யிட்டுள்ளது. கடந்த 2023-24 ஆம் நிதியாண்டில் நாடெங்கும் 83 ஆயிரம் கண்டுபிடிப்பு களுக்கு காப்புரிமை கோர பட்டுள்ளதாக வும் இதில் தமிழ்நாட்டில் இருந்து அதிக பட்சமாக 9.3 விழுக்காடு விண்ணப்பங்கள் வந்துள்ளதாகவும், மகாராஷ்டிராவில் இருந்து 6.8 விழுக்காடு விண்ணப்பங்கள் வந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவை மூலாதாரமாக கொண்ட காப்புரிமை விண்ணப்பங்களில் 70 விழுக்காடு சென்னை அலுவலகத்திற்கு மட்டும் வந்துள்ளதாகவும் அந்த அறிக்கை யில் கூறப்பட்டுள்ளது. இதில் பெரும் பாலானவை ஏஐ எனப்படும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மற்றும் மருத்துவத்துறை சேவை சார்ந்தவை என தெரிவிக்கப்பட்டுள்ளது. மாநில அரசு அளித்து வரும் மானி யங்கள், கண்டுபிடிப்புகளுக்கான ஆய்வக வசதிகள், ஆராய்ச்சிகளுக்கு உகந்த சூழல் ஆகியவையே தமிழகத்தின் முன்னேற்றத்திற்கு காரணங்களாக நாஸ்காம் தெரிவித்துள்ளது. இல்லாத அளவுக்கு காப்புரிமை விண்ணப்பங்கள் வந்துள்ளதாகவும் நாஸ்காம் ஆய்வறிக்கை தெரிவித்துள்ளது. குறிப்பாக காப்புரிமை கோரி விண்ணப்பித்திருக்கும் பெண்கள் எண்ணிக்கை 11.6 விழுக்காடாக அதி கரித்திருப்பதாகவும் அந்த ஆய்வு தெரி விக்கிறது. DEEP TECH SECTOR எனப்படும் கடினமான சவால்கள் நிறைந்த தொழில்நுட்ப பிரிவில் அதிக அளவில் விண்ணப்பங்கள் வந்திருப்பதாகவும் அந்த அறிக்கை தெரிவித்துள்ளது. தொழில்நுட்பத்துறையில் இந்தியா மிகப்பெரிய வளர்ச்சியை நோக்கி முன்னேறி வருவது இந்த ஆய்வறிக்கை மூலம் தெரிய வருவதாகவும் நாஸ்காம் கூறியுள்ளது.
மளிகை பொருட்கள் விலை கடும் உயர்வு'
சென்னை,ஏப்.28- கடந்த சில ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில் பருப்பு உள்ளிட்ட மளிகை பொருட்களின் விலை பல மடங்கு அதிகரித்து இருக்கிறது. சென்னையில் மொத்த விற்பனையில் கடந்த பிப்ரவரி மாதத்துடன் ஒப்பிடும் போது பல மளிகை பொருட்களின் விலை ரூ .5 முதல் ரூ . 20 வரை உயர்ந்துள்ளது. டெல்டா மாவட்டங்களில் ஏற்பட்ட வெள்ள பாதிப்பு காரணமாக அரிசி உற்பத்தி குறைந்து விட்டது. இதன் கார ணமாக வெளி மாநிலங்களில் இருந்து தமிழகத்துக்கு அரிசி கொண்டு வரப்படு வதால் அரிசி ஒரு கிலோவுக்கு 8 ரூபாய் முதல் ரூ . 15 வரை உயர்ந் துள்ளது. மேலும் துவரம் பருப்பு ஒரு கிலோவிற்கு ரூ.20 வரை உயர்ந்துள் ளது. வெளிமாநிலங்களில் இருந்து எடுத்து வரப்படும் வாகன செலவு, வறட்சி, வெள்ளம் உள்ளிட்ட பாதிப்பு களால் இந்த விலையேற்றம் ஏற்பட்டு ள்ளது. இனிவரும் நாட்களில் பருப்பின் விலை மேலும் உயருவ தற்கான வாய்ப்பு உள்ளதாக வியாபாரி கள் தெரிவித்துள்ளனர்.
நாளை ஒரு நாள் குடி நீர் நிறுத்தம்
சென்னை, ஏப்.28- சென்னை நெம்மேலியில் உள்ள கடல் நீரை குடிநீராக்கும் நிலையத்தில், பரா மரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ள தால், வருகிற 30 ஆம் தேதி காலை 9 மணி முதல் மே 1 ஆம் தேதி வரை மண்டலம் 13, 14, 15-க்கு உட்பட்ட பகுதிகளில் குடிநீர் விநியோகம் நிறுத்தப்படும் என்று சென்னை குடிநீர் வாரியம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை குடிநீர் வாரி யம் தெரிவித்திருப்பதாவது:- நெம்மேலியில் அமைந்துள்ள நாளொன் றுக்கு 110 மில்லியன் லிட்டர் உற்பத்தி திறன் கொண்ட கடல் நீரை குடிநீராக்கும் நிலை யத்தில், பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப் பட உள்ளதால் ஏப்.30 அன்று காலை 9 மணி முதல் மே 1 அன்று காலை 9 மணி வரை (1 நாள் மட்டும்) மண்டலம் - 13 (பகுதி), 14 மற்றும் 15-க்கு உட்பட்ட பகுதிகளுக்கு குழாய்கள் மூலம் வழங்கப்படும் குடிநீர் விநியோகம் நிறுத்தப்படும் என்று தெரி விக்கப்பட்டுள்ளது. அதன்படி குடிநீர் நிறுத்தம் செய்யப் படும் இடங்கள் வருமாறு:- மண்டலம் - 13 (அடையாறு பகுதி) திரு வான்மியூர், பள்ளிப்பட்டு, கோட்டூர் கார்டன், ஆர்.கே.மடம் தெரு இந்திரா நகர். மண்டலம் - 14 (பெருங்குடி) கொட்டி வாக்கம், பாலவாக்கம், பெருங்குடி, பள்ளிக் கரணை, மடிப்பாக்கம் மற்றும் புழுதி வாக்கம். மண்டலம் - 15 (சோழிங்கநல்லூர்) ஈஞ்சம் பாக்கம், நீலாங்கரை, அக்கரை, எழில் நகர், கண்ணகி நகர், காரப்பாக்கம், வெட்டு வான்கேணி, சோழிங்கநல்லூர், செம்மஞ் சேரி, ஒக்கியம்-துரைப்பாக்கம் ஆகிய பகுதி களில் குடிநீர் வினியோகம் நிறுத்தப்படு கிறது.
சென்னையில் குடிநீர் பிரச்சினை வராது
சென்னை,ஏப்.28- சென்னை மாநகர் பகுதிகளில் வரும் செப்டம்பர் வரை குடிநீர் தேவையை சமாளிக்க முடியும் என சென்னை குடிநீர் வாரியம் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் மார்ச், ஏப்ரல் மாதங்களில் வெப்பம் அதிகரிக்கும் போது, வெப்பச் சலனம் காரணமாக வழக்கமாக மழை பெய்யும். ஆனால் இந்த ஆண்டு மழை குறைவாக பெய்துள்ளது. வழக்கமாக மார்ச் 1 முதல் ஏப்.27 வரை தமிழ்நாட்டில் சராசரியாக 54 மிமீ மழை பெய்யும். ஆனால் இந்த ஆண்டு 9.4 மிமீ மழை மட்டுமே பெய்துள்ள தாக. இது வழக்கமான அளவை விட 83 விழுக்காடு குறைவு. இந்த காலகட்டத் தில் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சி புரம், வேலூர், திருவண்ணாமலை, திருப்பத்தூர், கடலூர், தருமபுரி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட 16 மாவட்டங் களில் ஒரு சொட்டு மழை கூட பெய்ய வில்லை. அதே நேரம் நாளுக்கு நாள் வெப்பம் அதிகரித்து வருகிறது. இது தொடர்பாக இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டலத் தலைவர் எஸ்.பாலச்சந்திரன் கூறும்போது, ‘‘தற்போது பசிபிக் பெருங்கடல் பகுதி யில் எல்நினோ நிலவுவதால் தமிழக பகுதியில் வெப்பம் அதிகமாக இருக்கும்.போதிய மேகங்கள் உருவா வதால் மழை வாய்ப்பு குறைந்துள் ளது’’ என்றார். தமிழ்நாட்டில் வெப்பம் அதிகரித்து வருவதால், சென்னை மாநகருக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில் நீர் மட்டம் குறைந்து வருகிறது. தற்போது பூண்டி ஏரியில் 1,020 மில்லியன் கன அடி, சோழவரம் ஏரியில் 130 மில்லி யன் கன அடி, புழல் ஏரியில் 2,930 மில்லியன் கன அடி, கண்ணன் கோட்டை - தேர்வாய் கண்டிகையில் 386 மில்லியன் கன அடி, செம்பரம்பாக்கம் ஏரியில் 2,389 மில்லியன் கன அடி என மொத்தம் 6,855 மில்லியன் கன அடி நீர் இருப்பில் உள்ளது.வீராணம் ஏரி வறண்டு உள்ளது. கடந்த ஆண்டு இதே தேதியில் (ஏப்.27) மொத்தம் 8,263 மில்லியன் கன அடியாக இருந்தது. இந்த ஆண்டு நீர் இருப்பு தற்போதைய நிலவரப்படி 1,408 மில்லியன் கனஅடி நீர் குறை வாக உள்ளது. இதனால் இந்த ஆண்டு கோடையில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படுமோ? என பொதுமக்கள் மத்தி யில் அச்சம் ஏற்பட்டுள்ளது. இது குறித்து சென்னை குடிநீர் வாரிய அதிகாரிகள் கூறியதாவது:- ‘‘தற்போது உள்ள நீர் இருப்பைக் கொண்டு செப்டம்பர் மாதம் வரை சென்னைக்கு குடிநீர் வழங்க முடியும்.மேலும், கடல்நீரை குடிநீராக்கும் திட்டத்தின் கீழ் ஏற்கெனவே மீஞ்சூர், நெம்மேலியில் தினமும் 210 மில்லி யன் லிட்டர் குடிநீர் கிடைத்து வரும் நிலையில், இந்த ஆண்டு நெம்மேலி யில் புதிதாகப் பயன்பாட்டுக்கு வந்துள்ள கடல் நீரை குடிநீராக்கும் திட்டம் மூலம் தினமும் 150 மி. லிட்டர் குடிநீர் கிடைத்து வருகிறது. எனவே இந்த ஆண்டு கோடையில் குடிநீர் தட்டு ப்பாடு ஏற்படாது’’ இவ்வாறு தெரிவித் தனர்.