சென்னை, நவ.1- ஒரு பக்கம் மாடு, இன்னொரு பக்கம் தெருநாய் தொல்லை என சென்னை மக்கள் அவதிப்படும் நிலையில், ஆவடி பட்டாபிராம் பகுதியில் நாய் கடித்து மூதாட்டி படுகாயம் அடைந்துள்ளார். சென்னையில் சாலையில் சுற்றித் திரியும் மாடுகளால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் கடும் அவதிபட்டு வருகின்றனர். இது தொடர்பாக பல்வேறு நடவடிக்கைகள் எடுத்தும் மாடுகள் சுற்றித் திரிவது குறைந்தபாடில்லை. அவ்வாறு மாடுகள் சுற்றித் திரிந்தாலும் அவ்வப்போது பொதுமக்களை முட்டி தாக்கு வது சமீப காலமாக அதிகரித்து வருகிறது. முதலில் பள்ளி சென்ற சிறுமியை தாக்கியது. பின்னர் மூதாட்டி, மற்றும் சாலையில் சென்ற வர்களை தொடர்ந்து தாக்கி வருகிறது. இதில் ஒருவருக்கு மாடு முட்டியதில் குடலில் பெரும் காயம் ஏற்படும் அளவுக்கு சென்றது. இதை தடுக்க மாநகராட்சி சார்பில் பிடிக்கப்படும் மாடுகளின் உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப் பட்டது. இந்நிலையில் மாடு உரிமையாளர்கள் அதிகாரிகளை மிரட்டுவதாக மாநகராட்சி ஆணையர் சமீபத்தில் தெரிவித்திருந்தார். அவ்வாறு மிரட்டுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் எச்சரித்திருந்தார். இந்நிலையில் தெரு நாய்களின் தொல்லை யும் தற்போது அதிகரித்துள்ளது. கடந்த 4 நாட்களுக்கு முன்னர் திருவொற்றியூர் பெரியார் நகரில் உள்ள விவேகானந்தர் தெருவில் வசிக்கும் தேவி தனது ஒரு வயது குழந்தையை தூக்கிக் கொண்டு வீட்டு வாசலில் நின்று கொண்டிருந்த போது, அந்த வழியாக வந்த தெரு நாய் ஒன்று திடீரென குழந்தை மீது பாய்ந்து குழந்தையின் முகத்தில் கடித்து குதறியது. இந்நிலையில் பட்டாபிராம் பகுதியில் வயதான மூதாட்டி ஒருவரை தெருநாய் ஒன்று காலில் கடித்துள்ளது. அவர் ரத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். தெரு நாய்களின் தொல்லை அதிகமாக இருப்பதாக அப்பகுதி மக்கள் அலுவலகத்தில் புகார் அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை என அப்பகுதி மக்கள் கூறுகின்றனர். இதுபோல் சென்னையின் பல்வேறு இடங்க ளில் நாய்கள் சுற்றி திரிகின்றன. மேலும் வாகனங்களில் செல்பவர்களை விடாமல் துரத்து கிறது. இதனால் அச்சத்தில் வாகனத்தை வேக மாக ஓட்டும் போது, விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே மாநகராட்சி அதிகாரிகள் சாலைகளில் சுற்றித்திரியும், மாடுகள், நாய்களை பிடிக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.