திருவள்ளூர், நவ 12- கடம்பத்தூர் அருகில் ஆற்றங்கரையில் குடியிக்கும் இருளர் இன மக்களுக்கு உரிய பாது காப்பு வழங்க வேண்டும் என தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தினர் கேட்டுக் கொண்டுள்ளனர். திருவள்ளூர் மாவட்டம், கடம்பத்தூர் ஒன்றியம் ஆற்றங்கரை ஓரமாக 21 இருளர் இன குடும்பங்களை சேர்ந்தவர்கள் வசித்து வருகின்றனர். பல்வேறு போராட்டங்களுக்கு பிறகு 21 குடும்பங்களுக்கும் குடி மகனை பட்டா வழங்கிய அமைச்சர் சா.மு.நாசர் அடுத்து தொகுப்பு வீடுகள் கட்டி கொடுக்கிறோம், புது மனை புகுவிழாவின் போது, பால் காய்ச்ச என்னை அழைக்க வேண்டும் என தெரிவித்திருந்தார். ஆனால் இதுவரை யாருக்கும் வீடுகளை கட்டிக்கொடுக்க வில்லை. இதனால் இருளர் இன மக்கள் இன்னும் ஆற்றங் கரையில் உள்ள பொத்தல் குடிசையில் உள்ளனர்.தற்போது பெய்து வரும் மழையால் பாதிக்கப்பட்டு மழையிலும், குளிரிலும் நடுங்கியபடி வாழ்கின் றனர்.மேலும் உணவு, தங்கு மிடம் இல்லாமல் தவிக்கும் மக்களுக்கு மாவட்ட நிர்வாகம் உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத் தின் மாவட்டச் செயலாளர் ஆர் தமிழரசு கேட்டுக் கொண்டுள்ளார்.