districts

img

ஓசூர் பார்வதி நகர், கால குண்டாவில் அடிப்படை வசதிக்கு ‘ஏங்கும்’ மலைக்குன்று மக்கள்

ஓசூர், செப்.12- ஓசூர் மாநகராட்சி 26-வது வார்டுக்கு உட்பட்ட மலைக் குன்றில் உள்ள பார்வதி நகர் மற்றும் காலகுண்டா பகுதியில் அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும். மேலும், வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. தொழில் நகரான ஓசூரில் ஆயி ரத்துக்கும் மேற்பட்ட சிறு, குறு, பெரிய தொழிற்சாலைகள் உள்ளன. இங்கு பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் பணி புரிந்து வருகின்றனர். தமிழ்நாட்டில் வேக மாக வளர்ந்து வரும் நகரங்களில் ஓசூர் ஒன்று. நகராட்சியாக இருந்த ஓசூர் கடந்த 2019 ஆம் ஆண்டு மாநகராட்சியாக தரம் உயர்ந்தது. தரம் உயர்ந்த போதும், அடிப்படை வசதிகளில் பின் தங்கி உள்ளது. ஓசூர் மாநகராட்சி 26-வது வார்டுக்கு உட்பட்ட ராயக்கோட்டை சாலையில் உள்ள மலைக்குன்றில் பார்வதி நகர் மற்றும் காலகுண்டா ஆகிய பகுதிகள் உள்ளன. இங்கு சுமார் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் கடந்த 40 ஆண்டாக வசித்து வரு கின்றனர். இக் குன்று புறம்போக்கு நிலத்தில் உள்ள தால், இங்குள்ள குடியிருப்புகளுக்கு பட்டா வழங்க வில்லை. ஆனால், மின்சாரம், குடும்ப அட்டை, வாக்காளர் அட்டை உள்ளிட்ட அனைத்தும் வழங்கப் பட்டுள்ளன. ஆனால், அடிப்படை வசதிகள் இல்லாததால் அப்பகுதி மக்கள் பெரும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர்.