districts

img

தொழிற்சாலைகளின் அலட்சியத்தால் அல்லல்படும் எண்ணூர் மக்கள்

சென்னை, ஜன.1- சென்னையில் இந்த மாத தொடக்கத்தில் மிக்ஜம் புயல் காரணமாக பலத்த மழை வெள்ளம் ஏற்பட்டது. அப்போது எண்ணூர் பகுதியில் உள்ள தொழிற்சாலையில் இருந்து எண்ணை கழிவு பக்கிங்காம் கால்வாயில் கலந்து கொசஸ்தலை ஆறு மற்றும் எண்ணூர் முகத்துவாரம் பகுதியில் பரவி கடலில் கலந்தது. இதனால் எண்ணூர் குப்பம், நெட்டு  குப்பம், தாழங்குப்பம் உள்ளிட்ட சுற்றி உள்ள  மீனவ கிராமங்களுக்குள்ளும் மழை வெள்ளத் தின் போது எண்ணை பரவி வீடுகளில் படிந்தது.  மீன்பிடி படகுகள், வலைகள் சேதமடைந்தன.  எண்ணை கழிவால் மீனவர்களும், திருவொற்றி யூர் மேற்கு பகுதி, சடையங்குப்பம், பர்மா  நகர் இருளர் காலனியை சேர்ந்த பொது மக்களும் கடும் பாதிப்புக்குள்ளாகினர். இதையடுத்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண தொகை வழங்க அரசு உத்தர விட்டுள்ளது. எனினும் எண்ணூரை சுற்றி உள்ள  மீனவ கிராமத்தினர் சிலரும்,

திருவொற்றியூர் மேற்கு பகுதியை சேர்ந்த பொதுமக்களும் தங்களுக்கு நிவாரண உதவித்தொகை வழங்க வேண்டும் என்று போராடி வருகின்றனர். இந்த எண்ணைகழிவு எண்ணூரில் இருந்து  பழவேற்காடு வரை பரவி உள்ளது. இதனால்  அங்குள்ள மீனவ கிராமத்தினரும் நிவாரண  உதவி கேட்டு போராட்டங்களை அறிவித்துள்ள னர். கடலில் கலந்த எண்ணை கழிவுகளை பெரும்பாலும் படகில் சென்று மீனவர்கள் மக்கு  மூலம் எடுத்து அகற்றினர். அதற்கு நீண்ட நாட்கள் ஆனது. இதற்குள் எண்ணை கழிவு கள் தரையில் 3 அடி வரை சென்றுவிட்டது, எண்ணை கழிவுகளை அகற்ற எந்தவித நவீன  இயந்திரமோ, மாற்று ஏற்பாடோ செய்யப்பட வில்லை. இதுவும் தற்போது சமூக ஆர்வலர்கள்  மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி யுள்ளது. கடந்த 2017அம் ஆண்டு ஜனவரி 28ஆம் தேதி  எண்ணூர் துறைமுகத்தில் கடலில் 2 கப்பல்கள்  மோதிக்கொண்ட போது பல டன் கச்சா எண்ணை கடலில் கலந்தது. இந்த எண்ணெய் படலம் எண்ணூரில் இருந்து திருவான்மியூர் வரை பரவியது. உடைந்த கப்பலில் இருந்து கொட்டிய எண்ணை கடல் நீரில் ஒரு அடி உயரத்திற்கு திட்டாக படர்ந்தது. அதனை பிரித்து எடுக்கும் பணியில் கடலோர காவல் படையினர் ஈடுபட்டனர். ஆனால் கடல் நீரில் இருந்து எண்ணையை பிரித்தெடுக்கும் நவீன இயந்திரம் இல்லாததால் பணியாளர்களே நேரடியாக வாளி மூலம் எண்ணை படலத்தை அப்புறப்படுத்தினர்.

எண்ணூர் கடலில் கலந்த எண்ணை படலத்தை அப்புறப்படுத்தவும் நவீன எந்திரம் எதுவும் இல்லாததால், மீனவர்களே படகில் சென்று மக்கு மூலம் எடுத்து பீப்பாய்களில் நிரப்பினர். இது பொதுமக்கள் சுற்றுச்சூழல் ஆர்வலர்களிடையே மீண்டும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 2017ஆம் ஆண்டு ஏற்பட்ட எண்ணை கசிவை படிப்பினையாக வைத்து கடலில் எண்ணை கலந்தால் அதை எளிதில் பிரித்து எடுக்கும் வகையில் திட்டங்கள் மற்றும் நவீன இயந்திரங்கள் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். ஆனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எதுவும் இல்லாமல் 2017ஆம்  ஆண்டு சம்பவத்திற்கு பிறகும் பாடம் கற்க வில்லை என பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர். அதேபோல் அடுத்தடுத்து மழை வெள்ளம்,  எண்ணை கசிவால் பாதிக்கப்பட்ட எண்ணூர்  மற்றும் சுற்றி உள்ள மீனவ கிராம மக்களுக்கு  தேவையான உதவிகள் மற்றும் பாதுகாப்பு  நடவடிக்கைகள் முறையாக எடுக்கப்படாத தால், அப்பகுதி மக்கள் தவித்து வருகிறார்கள்.  மொத்தத்தில் எண்ணூர் எண்ணை கசிவால்  அப்பகுதியில் சுற்றுச்சூழல், கடல் வளம் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.

வெளிநாடுகளில் இதுபோன்று எண்ணை  கசிவு மற்றும் தொழிற்சாலை விபத்துக்கள் ஏற்படும் போது பாதிக்கப்படும் சம்பந்தப்பட்ட  நிறுவனத்திற்கு அபராதத் தொகை கோடிக் கணக்கில் இருக்கும். மேலும் சம்பந்தப்பட்ட தொழிற்சாலை அல்லது நிறுவனம் மூடப் படும் நிலையும் ஏற்படும். ஆனால் இங்கு அந்தளவுக்கு கடுமையான நடவடிக்கைகள் இல்லை.  மேலும் இழப்பீடும் வெளிநாடுகளைப் போல் வழங்கப்படுவதில்லை. பொதுமக்களின் பாதுகாப்புக்கும் உரிய நடவடிக்கை எடுக்கப்படுவதில்லை. எனவே தொழிற்சாலை நிர்வாகத்தினர் இதுபோன்ற விபத்துகள் ஏற்படுவதை தடுக்க  எந்த வகையான நடவடிக்கைகளை எடுத்துள்ள னர், விபத்து ஏற்பட்டால் தடுப்பு நடவடிக்கை கள் என்ன? போன்ற விரிவான திட்டங்களை செயல்படுத்துவதில் அரசு தீவிர கண்காணிப்பு மற்றும் நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும் என்று பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து கவுன்சிலர் ஆர்.ஜெயராமன்  கூறுகையில், மழை வெள்ளம், எண்ணை கசிவு  அமோனியா வாயு கசிவு என அடுத்தடுத்து  ஏற்பட்ட இன்னல்களால் எண்ணூர் பகுதி  மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இதிலிருந்து பாதிக்கப்பட்ட அவர்கள் இன்னும் மீளவில்லை. கடலில் எண்ணை கலந்ததால் மீன்கள் இறந்துள்ளன. இதனால் மீனவர்கள் வாழ்வாதாரம் முற்றிலும் முடங்கிப் போயுள்ளது.

இந்நிலையில் தேசிய பசுமை தீர்ப்பாயத்தின்  தென்மண்டல அமர்வு தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. இதில் சம்பந்தப்பட்ட எண்ணெய் நிறுவனம் இழப்பீடு கொடுப்பதாக அறிவித் திருந்தாலும், இது எத்தனை பேருக்கு போது மானதாக இருக்கும் என்ற கேள்வி எழுகிறது. ஏனெனில் பெரும்பாலனவர்கள் வீட்டிலிருந்த டிவி, வாஷிங்மிஷின், பிரிட்ஜ், இருசக்கர வாகனம், உடமைகள் என அனைத்தையும் இழந்துள்ளனர்.  2017ஆம் ஆண்டுக்கு பிறகு அந்த எண்ணை விபத்தில் இருந்து எந்த பாடமும் கற்காமல் அதே நிலை நீடிப்பதும்,கச்சா எண்ணை தண்ணீரில் கலந்தால் அதை அகற்ற நவீன தொழில்நுட்ப இயந்திரங்களும், தெளிவான யோசனையும் இல்லை என்பதும் வேதனை அளிக்கிறது. எனவே மீண்டும் இதுபோன்ற விபத்து ஏற்படாமல் இருக்க திருவொற்றியூர், எண்ணூர், மணலியை சுற்றியுள்ள தொழிற்சாலைகளின் பாதுகாப்பு நடவடிக்கைகளை மறு ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும். பொதுமக்களின் உயிர் சம்பந்தப்பட்ட விஷயத்தில் எந்த சமரசமும் இன்றி அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டா

- அம்பத்தூர் எஸ்.ராமு