ஒன்றிய பாஜக ஆட்சியில் போராடிய விவசாயிகள் 4பேரையும் ஒரு செய்தியாளரையும் உத்தரபிரதேச மாநிலம் லக்கிம்பூரில் காரை ஏற்றி படுகொலை செய்ய தூண்டிய ஒன்றிய உள்துறை அமைச்சர் அஜய் மிஸ்ராவை கைதுசெய்யக்கோரி ஐக்கிய விவசாயிகள் சங்கங்கள் மற்றும் தொழிற்சங்கங்கள் சார்பில் கருப்பு கொடி ஆர்ப்பாட்டம் செங்கல்பட்டில் நடைபெற்றது. கோரிக்கைகளை வலியுறுத்தி சிஐடியு மாநிலக் குழு உறுப்பினர் கலைச்செல்வி, தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டப் பொறுப்பாளர் வி.ஏ.ஏழுமலை, தமிழ்நாடு விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் பி.எஸ்.ராமலிங்கம், ஏஐசிசிடியு மாநில சிறப்புத் தலைவர் சொ.இரணியப்பன் உள்ளிட்ட பலர் பேசினர்.