சென்னை,பிப்.14 - 2022 ஆம் ஆண்டில் இந்தியர்கள் அதிகம் பயணிக்கும் சுற்றுலாத் தலங்களில் ஒன்றாக தென்ஆப்பிரிக்கா உருவெடுத்துள்ளது. முந்தைய ஆண்டை விட இந்தியாவி லிருந்து வரும் பயணிகளின் எண்ணிக்கை 200 விழுக்காடு அதிகரித்து கடந்த ஆண்டு நவம்பர் வரை கிட்டத்தட்ட 50,000 இந்தியர்களின் வருகை தந்துள்ளதை வானவில் நாடு என்ற ழைக்கப்படும் தென்னாப்பிரிக்கா கண்டது. இது தென்னாப்பிரிக்கா சுற்றுலாத்துறை நிர்ணயித்திருந்த இலக்கைகாட்டிலும் அதிகமாகும் என்று சென்னையில் செய்தி யாளர்களிடம் பேசிய அந்நாட்டின் சுற்றுலாத்துறை அதிகாரியான நெலிஸ்வா என்கானி தெரிவித்தார். தென்னாப்பிரிக்க சுற்றுலாத் தலங்களை இந்தியர்களிடம் பிரபலப்படுத்த கொல் கத்தா, சென்னை, ஹைதராபாத் மற்றும் மும்பையில் பிப்ரவரி 13 ஆம் தேதி முதல் 16 ஆம் தேதி வரை செய்தியார்கள் சந்திப்பு, சுற்றுலாத்துறை நிறுவனங்களுடன் கலந்துரையாடல் நடைபெற்று வருகிறது, இதன் ஒருபகுதியாக சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இந்தியர்கள் கண்டு மகிழ தென்னாப்பிரிக்கா வில் ஏராளமான சுற்றுலாத்தலங்கள் உள்ளன என்றார். குறைந்தவிலையில் தங்கும் வசதிகள், சாகச சுற்றுலா வனவிலங்குகளை அதன் வாழ்விடங்களுக்கு சென்று காணு தல்,தென்னாப்பிரிக்காவின் உணவுகள் உள்ளிட்டவை இந்திய பயணிகளை கவரும் என்றார், சென்னை.கொல்கத்தா. ஐதராபாத் நகரங்களில் இருந்து தென்னாப்பிரிக்காவரும் இந்தியர்கள் எண்ணிக்கை அதிகமாக உள்ளது என்றும் அவர் கூறினார், இந்தியர்கள் தென்னாப் பிரிக்க மக்களிடையே நீண்ட கால நட்புறவு உள்ளதாகவும் அவர் கூறினார்,