மிக்ஜம் புயல் காரணமாக ஏழை எளிய மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டது. இதையடுத்து காப்பீட்டுக் கழக ஊழியர் சங்கம் சென்னை கோட்டம் 2இன் சார்பில் ஆர்.கே.நகர் 41ஆவது வட்டம் கொருக்குப்பேட்டை, கண்ணகி நகர் ஆகிய பகுதிகளில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு போர்வை, பால் பவுடர் உள்ளிட்ட நிவராணப் பொருட்களை சங்கத்தின் தலைவர்கள் வி.ஜானகிராமன், கே.மனோகரன், மாமன்ற உறுப்பினர் பா.விமலா, தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் வடசென்னை மாவட்டச் செயலாளர் எம்.ராஜ்குமார், வாலிபர் சங்கத்தின் முன்னாள் நிர்வாகிகள் ஆர்.லோகநாதன், வெ.ரவிக்குமார் ஆகியோர் வழங்கினர்.