சென்னை காசி தியேட்டர் அருகே உள்ள பேருந்து நிறுத்தத்தில் இருந்த நிழற்குடை பாதாள சாக்கடை பணிக்காக அகற்றப்பட்டது. பணிகள் முடிந்து பல மாதங்களாகியும் மீண்டும் நிழற்குடை அமைக்காததால் பயணிகள் கடும் வெயிலில் அவதிப்படுகின்றனர். எனவே உடனடியாக மீண்டும் நிழற்குடை அமைக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.