districts

சென்னை முக்கிய செய்திகள்

ஓடும் பேருந்தில்  ஓட்டை

சென்னை,பிப்.6- சென்னையில் ஓடும் பேருந்தில் ஏற்பட்ட ஓட்டையில் பெண் பயணி சரிந்து கீழே விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. திருவேற்காட்டில் இருந்து வள்ளலார் நகர் செல்லும் தடம் எண் 59 பேருந்து அமைந்தகரை அருகே சென்றபோது  பேருந்தில் இருக்கைக்கு கீழே இருந்த பலகை உடைந்து விபத்துக்குள்ளானது. ஓட்டையில் சறுக்கியபடி கீழே விழுந்த பெண்ணின் அலறல் சத்தம் கேட்டு பேருந்து உடனடியாக நிறுத்தப்பட்டது. பேருந்தின் ஓட்டை வழியே கீழே  விழுந்த பெண் சிறிது தூரம் தொங்கியபடியே சென்றார்.  இதில் அந்த பெண்ணுக்கு லோசன காயம் ஏற்பட்டது. பேருந்து உடனடியாக நிறுத்தப்பட்ட தால் பெண் நல்வாய்ப்பாக  உயிர் தப்பினார்.


பாதுகாப்பு கேட்டு புதுமண தம்பதி காவல் நிலையத்தில் தஞ்சம் 

கிருஷ்ணகிரி,பிப்.6- ஓசூர் பத்தலப்பள்ளி சேர்ந்த தங்கராஜ்(27). தனியார் மருந்தகத்தில் வேலை செய்து வருகிறார். இவருக்கும் ஏரி தெருவை சேர்ந்த பூர்ணிமா (21) இருவரும் காதலித்தனர். இதையடுத்து, திருமணம் செய்து கொள்ள முடிவு செய்துள்ளனர். இந்த தகவலை பூர்ணிமா பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். இதற்கு கடும் எதிர்ப்பு  தெரிவித்த பெற்றோர். தனது மகள் பூர்ணிமாவை வீட்டில் அடைத்து வைத்துள்ளனர். இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பு வீட்டை விட்டு வெளியேறிய பூர்ணிமா, தங்கராஜை சந்தித்துள்ளார். பின்னர், இருவரும் சித்தூர் சென்று ஜன. 31 அன்று அங்குள்ள கோயிலில் திருமணம் செய்து கொண்டனர். இந்த நிலையில், பூர்ணிமா குடும்பத்தினர் ஓசூர் நகர காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். இதைத் தொடர்ந்து, சித்தூரிலிருந்து கிருஷ்ணகிரிக்கு வந்த பூர்ணிமா, தங்கராஜ் இருவரும் மாவட்ட காவல் நிலையத்திற்கு சென்று பாதுகாப்பு கேட்டு காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளனர். பிறகு, ஓசூர் நகர காவல் நிலையத்தில் விசாரணைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு  நடந்த விசாரணையில் பூர்ணிமா வின் குடும்பத்தினர் இந்த திருமணத்தை ஏற்றுக் கொள்ளவில்லை. இந்த நிலையில், பூர்ணிமாவை தங்கராஜ் குடும்பத்தினருடன் காவல்துறையினர் அனுப்பி வைத்தனர்.  பூர்ணிமா இந்நிலையில் பெற்றோரிடமி ருந்து தங்கள் இருவருக்கும் பாதுகாப்பு கொடுக்க வேண்டும் என்று காவல் துறை யிடம் மீண்டும் கோரிக்கை விடுத்துள்ளார்.

காட்டுமன்னார்கோவிலில்  உழவர் சந்தை திறப்பு

சிதம்பரம், பிப்.6- கடலூர் மாவட்டம், காட்டுமன்னார்கோவிலில் வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை சார்பில் ரூ.45.33 லட்சத்தில் கட்டப்பட்ட உழவர் சந்தை திறப்பு விழா மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ் தலை மையில் நடைபெற்றது.  அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் கலந்து கொண்டு உழவர் சந்தையை திறந்து வைத்தார். இதில் வேளாண் துறை செயலாளர் அபூர்வா, வேளாண் வணிகம் மற்றும் விற்பனை துறை ஆணை யர் பிரகாஷ்,சட்டமன்ற உறுப்பினர் சிந்தனைச் செல்வன் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர். காட்டு மன்னார்கோயில் பேரூராட்சி மன்ற தலைவர் கணேசன், உதவி வேளாண்மை அலுவலர் சங்க மாநிலத் தலைவர் அருள்  உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

கூகுள் பே மூலம் லஞ்சம் பெற்ற தலைமை காவலர் பணியிடை நீக்கம்

கடலூர்,பிப்.6- மதுபான கடத்தலை தடுக்கும் வகையில் கடலூர் மாவட்டத்தில் ஆல்பேட்டை, சாவடி உள்ளிட்ட 8 இடங்க ளில் சோதனை சாவடி அமைக்கப்பட்டு, காவல்துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இருப்பினும் மது கடத்தல் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறது. இது ஒருபுறம் இருக்க, மற்றொரு பக்கம் வாகனங்களில் குடிப்பதற்கு ஒரு மது பாட்டில், இரண்டு பாட்டில்கள் என கொண்டு வருபவர்களை காவல்துறையினர் மறித்து, அந்த பாட்டில்களை பறிமுதல் செய்து வருகின்றனர்.  இந்த நிலையில், வழக்கு பதிவு செய்யாமல் இருக்க, சம்பந்தப்பட்ட நபர்களை மிரட்டி கூகுள்- பே மூலம் காவலர்கள் லஞ்சம் வாங்குவதாக தொடர்ந்து பல்வேறு புகார்கள் எழுந்தன. அந்த வகையில் தற்போது கூகுள்-பே மூலம் லஞ்சம் வாங்கிய காவலர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

சிபிஎம் போராட்டம் எதிரொலி சாதி சான்று கிடைத்ததால் பன்னியாண்டி சமூக மாணவர்கள் மகிழ்ச்சி

கிருஷ்ணகிரி,பிப்.6- கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி வட்டத்தில் வசிக்கும் தாழ்த்தப்பட்ட, பழங்குடி இருளர் மக்களுக்கு இலவச வீட்டுமனை, பன்னியாண்டி சமூக மாண வர்களுக்கு சாதி சான்று கேட்டு கடந்த  டிசம்பர் 26 அன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் காத்திருப்புப் போராட்டம் நடைபெற்றது. இதைத் தொடர்ந்து, அதிகாரிகள் பேச்சு நடத்தினர். அப்போது, பன்னியாண்டி மக்களுக்கு பத்து ஆண்டு களுக்கு மேலாக சாதி சான்று வழங்க அரசு அதிகாரிகள் மறுத்து வருவது குறித்து சிபிஎம் வட்டச் செயலாளர் சாமு விரிவாக விளக்கம் அளித்தார். இதையடுத்து, போச்சம்பள்ளி பகுதியைச் சேர்ந்த கார்த்திக் மகன் முத்தமிழ், மகள் தமிழ் மொழி, ரமேஷ் மகள் தீபிகா ஆகிய மூவருக்கும் வட்டாட்சியர் சாதி சான்று வழங்கினார்.  இதற்கு நன்றி தெரிவித்திருக்கும் கட்சித் தலைவர்கள், காவேரிப்பட்டினம் கோவிந்தராஜ் மகன்கள் மணிகண்டன், பரத், சக்திவேல் மகன் தயாநிதி மாறன், தமிழரசன், மகள் இலக்கியா உள்பட 20 க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு சாதி சான்று வழங்க வேண்டும் என்று அதி காரிகளுக்கு வேண்டுகோள் விடுத்துள்ள னர்.