districts

img

ஏழைகளுக்கு முதல் குரல் கொடுக்கும் இயக்கம் செங்கொடி: எம்.சின்னதுரை எம்எல்ஏ பேச்சு

சிதம்பரம், ஜூலை 26-

      ஏழைகள் பாதிக்கப்படும் போது செங்கொடி இயக்கம் தான் முதலில் களத்தில் நிற்கும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சட்ட மன்ற உறுப்பினர் எம். சின்னதுரை தெரிவித்தார்.

     கடலூர் மாவட்டம், புவனகிரியில் நிதியளிப்பு மற்றும் அரசியல் விளக்கப் பொதுக்கூட்டம் ஒன்றியச் செயலாளர் ஸ்டாலின் தலைமையில் நடை பெற்றது. இதில் பங்கேற்று பேசிய எம். சின்னதுரை,“ ஒரு கூட்டம் சாதி, மத அமைப்புகளை உருவாக்கி அதற்கு நியாயத்தை கற்பிக் கும் அந்தக் கூட்டம், வர்க்க ரீதியாக ஏழை மக்கள் ஒன்றி ணைய கூடாது என்ப தில் தெளிவாக உள்ளது” என்றார். திமுக அரசின் மக்கள் நல திட்டங்களை, நட வடிக்கைகளை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மக்கள் மன்றத்திலும், சட்ட மன்றத்திலும் வரவேற்கும். அதே நேரத்தில், மக்கள் ஒரு திட்டம் பாதிப்பு என்றால் அதை நடைமுறைப்படுத்த கூடாது என்று முதலில் எதிர்ப்பதும், களத்தில் இறங்கி குரல் கொடுப்பது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிதான் என்றும் அவர் கூறினார்.

    8 மணி நேர வேலையை 12 மணி நேர மாக உயர்த்தியபோது சட்ட மன்றத்தில் முதலில் குரல் கொடுத்தது செங்கொடி இயக்கம்தான். வீதிகளில் ஒலித்ததும் செங்கொடியின் குரல்தான் என்றும் அவர் தெரிவித்தார்.

   இந்த கூட்டத்தில் மாவட்டச் செயலாளர் கோ. மாதவன், மாநிலக் குழு உறுப்பினர் எஸ்.ஜி. ரமேஷ்பாபு, மாவட்ட செயற் குழு உறுப்பினர் ராமச் சந்திரன், சதானந்தம், பரங்கிப்பேட்டை ஒன்றியச் செயலாளர் விஜய், ஜாகிர் உசேன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். புவன கிரி நகரச் செயலாளர் மண வாளன் நன்றி கூறினார்.

    முன்னதாக, பரங்கிப் பேட்டை வடக்கு ஒன்றிய வில்லியநல்லூர் பல்வேறு அமைப்புகளிலிருந்து விலகிய இளைஞர்கள் தங்களை மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியில் இணைத்துக் கொண்டனர். இந்த இளைஞர்களுக்கு சின்னதுரை எம்எல்ஏ கதராடை அணிவித்து வர வேற்றார்.