இறந்த மகளின் உடலுடன் 3 நாட்கள் தனியாக இருந்த தாய்
சென்னை,அக்.17- மணலி புதுநகர் பகுதியைச் சேர்ந்தவர் ஜாஸ்மின் (வயது84). இவர்களது மகள் ஷீலா (55). இவர் திருமணம் செய்து கொள்ளாமல் தாயுடன் தங்கி இருந்தார். ஜாஸ்மின் சற்று மனநிலை பாதிக்கப் பட்டிருந்தார். அவரை மகள் ஷீலா கவனித்து வந்தார். மறைந்த தந்தையின் பென்சன் பணத்தை வைத்து இருவரும் வாழ்ந்து வந்தனர்.கடந்த 3 நாட்களாக வீட்டில் இருந்து ஷீலா வெளியே வரவில்லை. வீடும் பூட்டி கிடந்தது. இந்த நிலையில் செவ்வாயன்று காலை ஷீலா வின் வீட்டில் இருந்து பயங்கர துர்நாற்றம் வீசியது. இதனால் சந்தேகம் அடைந்த அக்கம்பக்கத்தினர் மணலிபுதுநகர் காவல்நிலையத்திற்கு தகவல் தெரி வித்தனர்.போலீசார் விரைந்து வந்து பார்த்தபோது வீட்டில் உள்ள அறையில் ஷீலா இறந்து கிடந்தார்.அழுகிய நிலை யில் இருந்த அவரது அருகில் மனநிலை பாதிக்கப்பட்ட தாய் ஜாஸ்மின் அமர்ந்திருந்தார். இதையடுத்து போலீசார் ஷீலாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.அவர் இறந்து 3 நாட்கள் இருக்கும் என்று தெரிகிறது. மகள் இறந்தது தெரியாமல் ஜாஸ்மின் மகளின் உடல் அருகே இருந்தது விசாரணையில் தெரியவந்தது. ஷீலா எப்படி இறந்தார் என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சாலை விபத்தில் பெண் பலி
அம்பத்தூர், அக். 17- பூந்தமல்லி நசரத்பேட்டை அகரம் மேல் கிராமத்தைச் சேர்ந்த பாத்திமா (45). இவர்களது மகன்கள் ரீகன் (23), அக்வின். இந்நிலையில் பாத்திமாவிற்கு உடல் நிலை பாதிக்கப்பட்டதால் மூத்த மகன் ரீகன் தாய் பாத்திமாவை யும், தம்பி அக்வினையும் மோட்டார் சைக்கிளில் ஏற்றிக் கொண்டு அம்பத்தூரில் உள்ள தனியார் மருத்துவ மனைக்கு அழைத்துச் சென்றார். பின்னர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பிக் கொண்டிருந்தனர். ஆவடி பருத்திப்பட்டு அருகே சென்று கொண்டிருக்கும் போது, அந்த வழியாக வந்த லாரி, மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் பாத்திமா லாரி சக்கரத்தில் சம்பவ இடத்திலேயே பலியானார். விபத்து நடந்தவுடன் லாரி ஓட்டுநர் வண்டியை நிறுத்தி விட்டு தப்பி ஓடி விட்டார். இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பூந்தமல்லி போக்குவரத்து காவல் துறையினர் பாத்திமா உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக போரூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பல்மருத்துவம் இலவச ஆலோசனை
சென்னை,அக்.17- பல் மருத்துவத்தில் முன்னணி கிளினிக்கான மேக்ஓ வர் அனைவருக்கும் இலவச பல் மற்றும் சருமம் தொடர்பான ஆலோசனைகளை வழங்கவுள்ளது. மேக்ஓவர் மையங்களில் வாடிக்கையாளர்களுக்கு தகுதி வாய்ந்த நிபுணர்களால் மேம்பட்ட தொழில்நுட்பத்துடன் சருமம், முடி, புன்னகை தொடர்பான ஆலோசனை மற்றும் சிகிச்சைகள் வழங்கப்படுகிறது. தற்போது புதிதாக நுங்கம்பாக்கம், அடையாரில் இரண்டு மையங்களை இது திறந்துள்ளது. இங்கு பல் மருத்துவ நிபுர்ணர்கள் மற்றம் சரும மருத்துவர்களுடன் ஆலோசனைகள் இலவசமாக வழங்கப்படும் என்று இணை நிறுவனர் டாக்டர் அர்பி மேத்தா அறிவித்துள்ளார்.
பார்வையாளர்களை கவரும் மஞ்சள் நிற அனகோண்டா
செங்கல்பட்டு,அக்.17- வண்டலூர் பூங்காவில் புதிதாக பிறந்த 8 மஞ்சள் நிற அனகோண்டா குட்டிகள் பார்வையாளர்கள் பார்வைக்கு விடப்பட்டுள் ளது. இது பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது. மஞ்சள் நிற அனகோண்டா பாம்புகள் சுமார் 6 அடி முதல் 7 அடி வரை வளரும் தன்மை கொண்டது.கடந்த 2020 -ம் ஆண்டு விலங்குகள் பரிமாற்றம் திட்டத்தில் சென்னை முதலைப் பண்ணையில் இருந்து அனகோண்டா பாம்பு ஜோடி பெறப்பட்டது.இதன் இனப்பெருக்கத்தின் மூலம் கிடைக்கப்பெற்ற 6 குட்டிகள் பொது மக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது. அனகோண்டாக்கள் தற்போது நல்ல ஆரோக்கியத்துடன் உள்ளன. பூங்காவில் விலங்குகள் இனப்பெருக்கம் செய்வதற் கான இயற்கை சூழ்நிலை உருவாக்கப்பட் டுள்ளதாக அதிகாரிகள் கூறினர்.
பூனையை தாக்கும் புதிய வைரஸ் நோய்
சென்னை,அக்.17- சென்னையில் பூனையை தாக்கும் புதிய வைரஸ் நோய் பரவி வரு கிறது. பெலைன் பார்வோ வைரஸ் எனப்படும் இந்த வைரஸ் பூனைகளை அதிக அளவில் தாக்கி வரு கிறது. சென்னையில் இந்த வைரசால் பாதிக்கப் பட்டுள்ள பூனைகள் அதி கரித்து வருகின்றன. இந்த வைரஸ் மனி தர்களை பாதிக்காது. காய்ச்சல் இருக்கும் பூனைகளுக்கு பாராசிட்டமால் மாத்திரை தரக்கூடாது. பாரா சிட்டமால் மாத்திரையில் உள்ள நச்சுத்தன்மை க்கு பூனைகள் எளிதில் பாதிக்கப்படுகின்றன. இந்த நச்சுகள் அவற்றின் கல்லீரல் மற்றும் ரத்த அணுக்களை கடுமையாக சேதப்படுத்தும் என மருத்துவர்கள் கூறுகின்றனர்.
வேலை வாங்கித் தருவதாக மோசடி:
முன்னாள் ராணுவ வீரர்கள் கைது'
ராணிப்பேட்டை, அக். 17 - திமிரி அடுத்த வரகூர்பட்டணம் பகுதியை சேர்ந்த வெங்கடேசன் ராணுவத்தில் அவில்தார் பணியாற்றி கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஓய்வு பெற்றுள்ளார். கடந்த 2019 ஆம் ஆண்டு வரகூர் பட்டணம் கிராமம் சுற்றியுள்ள பகுதி இளைஞர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினரை சந்தித்து இந்திய ராணுவம் மற்றும் துணை ராணுவம் ரயில்வே துறை போன்ற மத்திய அரசு துறைகளில் வேலை பெற்று தருவதாக கூறி வெங்கடேசன் மற்றும் அவரது மனைவி பகவதி இணைந்து ஆசை வார்த்தை கூறி நபருக்கு 5 லட்சம் முதல் 8 லட்சம் வரை சுமார் 20க்கும் மேற்பட்ட நபர்களிடம் பணம் பெற்றதாக கூறப்படுகிறது. பணம் வழங்கிய இளைஞர்கள் மற்றும் அவர்களின் பெற்றோர்கள் வெங்கடேசனிடம் வேலை குறித்து கேட்கும்போது எல்லாம் கொரோனா பேரிடர் காலங்களில் காரணமாக காட்டி வந்ததாகவும் தற்போது வெங்கடேசன் தனது குடும்பத்தாருடன் திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள அவரது மாமனார் வீட்டில் குடியேறி இருப்பதாகவும் தெரிவிக்கின்றனர். மேலும் வெங்கடேசன், சுரேஷ், ரோகித் ஆகியோரை நம்பி வெளி மாநிலங்களுக்கு பயிற்சி பணிக்கு சென்ற நபர்கள் போலியான பயிற்சி மையங்களில் தங்கி இருப்பதை அறிந்து கொண்ட பிறகு தாங்கள் ஏமாற்றப்பட்டிருப்பது அறிந்து சொந்த ஊர்களுக்கு திரும்பினர். பாதிக்கப்பட்ட நபர்கள் வேலை வாங்கி தருவதாக பண மோசடியில் ஈடுபட்ட நபர்களின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என திமிரி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் அடிப்படையில் தற்போது வெங்கடேசன் மற்றும் சுரேஷ் ஆகிய இரண்டு முன்னாள் ராணுவ வீரர்கள் திமிரி காவல் துறையினரால் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி பின்னர் வேலூர் மத்திய சிறைக்கு கொண்டு சென்றனர்.