கால்பந்து உலகில் முக்கிய மான தொடராக இருப்பது ஐரோப்பிய கால்பந்து சாம்பியன்ஸ் லீக் (யுஇஎப்ஏ). இந்த தொடரில் விளை யாடுவதே மிகவும் கவுரவமான விஷ யம். கவுரவம் ஒருபக்கம் என்றாலும் கடினமான விஷயமும் உள்ளது. கார ணம் உலகின் ஒவ்வொரு மூலை முடுக் கில் இருந்தும் வீரர் - வீராங்கனை கள் யுஇஎப்ஏ கால்பந்து தொட ரில் களமிறங்குவார்கள். இதனால் லீக் ஆட்டங்கள் கூட இறுதி ஆட்டங்கள் போல சுவாரஸ்யமாக நடைபெறும். முக்கியமாக கால்பந்து உலகில் ஜொலிக்க மற்றும் தங்கள் நாட்டு தேசிய அணிக்காக உலகக்கோப்பை யில் அசத்த யுஇஎப்ஏ தொடர்தான் தொடக்க புள்ளியாக உள்ளது என்பதால் யுஇஎப்ஏ தொடர் கால்பந்து உலகின் அனைத்து காலங்களிலும் ஸ்டார் அந்தஸ்தை கொண்டுள்ளது. இந்நிலையில் இந்த யுஇஎப்ஏ மகளிர் பிரிவின் ஒரு லீக் ஆட்டத்தில் அப்பல்லோன் எப்சி (சைப்ரஸ் கிளப்) - சாமேக்ரெலா எப்சி (ஜார்ஜியா கிளப்) அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் அப்பல்லோன் எப்சி 3-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்ற நிலையில், 3 கோல்களில் 2-வது கோலை இந்திய வீராங்கனை மனிஷா கல்யாண் அடித்து புதிய வரலாறு படைத்தார். கோலடித்தது மட்டுமல்லாமல் ஐரோப்பா கால்பந்து கிளப்பில் விளை யாடிய முதல் இந்திய வீராங்கனை என்ற சிறப்பையும் மனிஷா கல்யான் பெற்றுள் ளது குறிப்பிடத்தக்கது.
கடினஉழைப்பு
“நான் பெரும்பாலும் பயிற்சிக்காக முதல் ஆளாக களத்திற்கு செல்கிறேன். கடைசி ஆளாக வெளியேறுகிறேன். இது எனது கடின உழைப்புக்கு போதுமான சான்றாகும். அசைக்க முடியாத கடின உழைப்பு, அர்ப்பணிப்பு மற்றும் உறுதியால் யுஇஎப்ஏ தொடரில் கோலடித்தேன். ஆனாலும், நான் திருப்தியடையவில்லை, நான் ஓய்வெடுக்கப் போவதில்லை. இன்னும் வெகுதூரம் செல்ல வேண்டியுள்ளது.
யுஇஎப்ஏ முதல் கோல் குறித்து மனிஷா கல்யாண்