districts

img

நவீன எரிவாயு தகன மேடை அமைச்சர் திறந்து வைத்தார்

திருவள்ளூர், மார்ச் 2- திருவள்ளூர் மாவட்டம் ஏரிபேட்டையில் ஊரக வளர்ச்சித் துறையின் சார்பில் வருவாய் மானி யத்தில் இருந்து ரூ.2. கோடி  மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள நவீன எரிவாயு தகனம் மேடையை கைத்தறி மற்றும்  துணிநூல் துறை அமைச்சர் ஆர். காந்தி  திறந்து வைத் தார் மாவட்ட ஊராட்சி குழுத் தலைவர் உமா மகேஸ்வரி, கூடுதல் ஆட்சியர் வளர்ச்சி   ஓ.என்.சுகபுத்ரா ஆகியோர் முன்னிலையில் ரூ.2 கோடி  மதிப்பீலான எரிவாயு தகன மேடையை  கும்மிடிப் பூண்டி சட்டமன்ற உறுப்பி னர் டி.ஜெ. கோவிந்தராஜன் திறந்து வைத்தார். கும்முடிப்பூண்டி ஊராட்சி ஒன்றியத்திற்கு கீழ்முதலம்பேடு ஊராட்சி ஏரிபேட்டை கிராமத்தில் ஒப்படைக்கப்பட்ட வருவாய் மானியம் திட்டத் தின் கீழ் 2021 - 2022  ஆம் ஆண்டு ரூ.1,93,20,000 மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள நவீன எரிவாயு தகன மேடை, குளியலறை மற்றும் சுற்றுச்சுவரை அவர் திறந்துவைத்தார். இந்த நவீன எரிவாயு தகன  மேடையினை சுற்றுவட்டத் திற்கு உட்பட்ட 10 ஊர் மக்கள் பயன்படுத்தி கொள் வார்கள். இந்நிகழ்வில் மாவட்ட திட்ட அலுவலர் முருகன், கும்மிடிப்பூண்டி வட்டார வளர்ச்சி அலுவலர்கள்  அமிழ்தமன்னன், சந்திர சேகர், கீழ்முதலம்பேடு ஊராட்சி மன்றத் தலைவர் கோ. நமச்சிவாயம் மற்றும் உள்ளாட்சிப் பிரதிநிதிகள் பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.