districts

img

குறைந்தபட்ச ஊதியம் ரூ.26 ஆயிரம் கடலூர் மாவட்ட மாநாடு கோரிக்கை

கடலூர்,ஆக.3-

    குறைந்தபட்ச ஊதியம் ரூ.26 ஆயிரத்தை நிர்ண யிக்க வேண்டும் என்று அனைத்து மத்திய தொழிற்சங்கங்களின் கடலூர் மாவட்ட மாநாடு வலியுறுத்தியுள்ளது.

    கடலூரில் நடைபெற்ற இந்த மாநாட்டிற்கு தொமுச மாவட்ட கவுன்சில் செயலாளர் பொன்முடி தலைமை தாங்கினார். பேரவை செயலாளர் வீர ராமச்சந்திரன், சிஐடியு மாநில துணைத் தலைவர் பி.கருப்பையன், மாவட்டச் செயலாளர் டி.பழனிவேல், ஏஐடியுசி மாவட்ட பொதுச் செயலாளர் பன்னீர்செல்வம், ஐஎன்டி யுசி மாவட்ட கவுன்சில் தலைவர் மனோகரன், எச்எம்எஸ் மாவட்டச் செயலாளர் சரவணன் ஆகி யோர் உரையாற்றினர்.

    இந்த மாநாட்டில், அனைத்து தொழிலாளர்க ளுக்கு குறைந்தபட்ச ஊதியம் ரூ.26 ஆயிரம், மாதந்தோறும் ரூ.10 ஆயிரம் ஓய்வூதியம் வழங்க வேண்டும். வேலை நியமனத்தில் ஒப்பந்த முறை ஒழிக்கப்படவேண்டும். அக்னி பாத் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும்.  

    சிறு, குறு மற்றும் மத்திய தர விவசாயிகள், விவசாய தொழிலாளர்கள் பெற்றுள்ள கடன்களை ஒன்றிய பாஜக அரசு ஒரு முறை தள்ளுபடி செய்ய வேண்டும். 60 வயதான அனைவருக்கும் மாதம் ரூ.5 ஆயிரம் ஓய்வூதியம் வழங்க வேண்டும்.

    தொழிலாளர் தொகுப்பு சட்டம் நான்கையும் திரும்ப பெறுவதுடன் மின்சார திருத்த மசோதா 2022-ஐ திரும்ப பெற வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.